1986 -ல் வெளியான ‘புன்னகை மன்னன் ‘படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் -ரேகா முத்தமிட்டிருந்த அந்த லிப் லாக் காட்சியை தற்போது சிலர் பிரச்னையாக்கி வருகிறார்கள்.
முன்னதாகவே அந்த முத்தக் காட்சியை பற்றி இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் சொல்லாமல் திட்டமிட்டு எடுத்துவிட்டதாக நடிக ரேகா குற்றம் சாட்டியிருக்கிறார்.
பிரச்னைக்கு ரேகா இப்போது விதை போட்டது ஏன் ? இந்த முத்தக்காட்சிக்காக கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சிலர் சொல்வதில் அரசியல் இருக்கிறதா? மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் மீது அவதூறு கிளப்புகிற முயற்சியா?
இப்படியெல்லாம் பல சந்தேகங்கள் வரலாம்.
ரேகா என்ன சொல்லியிருக்கிறார்?
“அந்த காட்சியை எடுக்கிறபோது கே.பி.சார் சாகப்போகிற ஒரு பெண்ணின் மனநிலையில் கண்களை மூடிக்கொள்ள சொன்னார். முத்தமிடுகிற சர்ப்ரைஸ் சீன் பற்றி கமல் சாரிடம் என்ன சொன்னார் என்பது எனக்கு தெரியாது. முத்தமிட்டதும் இருவரும் குதிப்பது போல காட்சி அமைந்தது.
எங்கப்பாவுக்கு இந்த சீன் பிடிக்கவில்லை.எனக்கும் பிடிக்கவில்லை. கே.பி.சாரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்த சுரேஷ் கிருஷ்ணா வந்து என்னை சமாதானப்படுத்த முயன்றார்.அந்த சீன் வல்கர் -ஆபாசம் இல்லை.பெரிய ராஜா ஒரு சிறுமிக்கு கொடுக்கிற முத்தம் போன்றதுதான் என்று சொன்னார்.
நான் அந்த சீன் பற்றி வெளிப்படையாகப் பேசியதை கேபி சார்,கமல் சார் இருவரும் விரும்பவில்லை “என்பதாக சொல்லியிருக்கிறார்.
கிட்டத்தட்ட 34 வருடங்கள் கடந்து போய் விட்டது. அந்த லிப் லாக் காட்சியை பற்றி மக்கள் மறந்தும் போனார்கள்.
ஆனால் ரேகாவிடம் சொல்லாமல் முத்தமிட்டதற்காக கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சிலர் இப்போது வலியுறுத்துவதற்கு என்ன காரணம்.அரசியலா?
மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை நடிகை ரேகாவும் விரும்புகிறாரா? விருப்பம் இல்லாமல் முத்தக்காட்சி எடுத்த பின்னர் அந்த காட்சியைப் பற்றி தனது கோபத்தை இயக்குநரிடம் சொல்லியிருக்கலாமே.?
அந்த படத்தில் தொடர்ந்து நடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே?எவ்வளவோ வழிகள் இருந்தும் தற்போது ரேகா கிண்டுவதற்கு என்ன காரணம்? யார் அவரை தூண்டிவிடுகிறார்கள்? பதில் கிடைக்குமா?