தென்னகத்து திரை உலகில் மெகா பட்ஜெட் படங்கள் என்றால் அது ஷங்கர் -லைகா -கமல்ஹாசன் ஆகிய மூவர் தயாரிப்பில் உருவாகிற இந்தியன்.2 , மணிரத்னத்தின் மல்டி ஸ்டார் படமான பொன்னியின் செல்வன் , தெலுங்கில் எஸ்.செஸ். ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் ஆகிய மூன்று படங்களை சொல்லலாம். ரசிகர்கள் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு அந்த மூன்று படங்களுக்கும் இருக்கிறது.
கோவிட் 19 தொற்று காரணமாக ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் தொடர்ந்து படப்பிடிப்புகளை தொடரமுடியாமல் பாதியிலேயே நிற்கின்றன. ஆனாலும் சில தளர்வுகளை அரசு அனுமதித்திருப்பதால் இந்தியன் 2 ,பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் விஎபெக்ஸ் வேலைகள் மும்பையில் நடந்து வருகின்றன. பிரபல பாலிவுட் நடிகர் அஜயதேவ்கனின் வி.எப்.எக்ஸ் நிறுவனத்தில்தான் கிராபிக்ஸ் வேலைகள் நடக்கின்றன.
இதுவரை படமாக்கப்பட்டவைகள்தான் பணி முடிந்திருக்கின்றன.