சந்தானத்தைப் போலவே அவரது படங்களின் பெயர்களும் வித்தியாசமாகவே இருக்கும். ‘டகால்டி’ என்கிற பெயரில் படம் எடுத்த சந்தானம் அடுத்த படத்துக்கு ‘டிக்கிலோனா’ என்பதாக பெயர் வைத்தருக்கிறார். ‘பிஸ்கோத்’ என்பதும் அவரது படத்தின் பெயர்தான்.
இந்த படங்களின் 80 சதவீத படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில், லாக்டவுன் முடிவுக்கு வந்தவுடன், இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’டிக்கிலோனா’ படத்தின் புரமோஷனும் தொடங்க உள்ளதாக நடிகர் சந்தானம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். சந்தானம் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார். அடுத்தடுத்து சந்தானத்தின் மூன்று கெட்டப்புகளையும் தொடர்ச்சியாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது
அந்த படத்தில் புதுமையாக என்ன பண்ணப்போகிறார் என்பதை படக்குழு ரகசியமாகவே வைத்திருக்கிறது.
அனகா கதாநாயகியாக நடித்துள்ள இப் படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். கார்த்திக் யோகி இயக்கி வரும் இப் படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.