பாகுபலி ஹீரோ பிரபாஷின் 21 வைத்து படத்தின் நாயகி யார் என்பது தெரியாமல் திண்டாடிக்கொண்டிருந்த திரை உலகம் தற்போது கையில் சுவீட் வைத்துக் கொண்டிருக்கிறது.
அவரா , இவரா என்றெல்லாம் ஆளுக்காள் ஆருடம் கணித்தார்கள். அத்தனையும் பொய்யாகிப்போனது.
இவருக்குத்தான் என்று விதி என்று இருக்கும்போது தீபிகா படுகோனே வந்தால்தான் என்ன ?
மிகப்பெரிய பட்ஜெட். பிரபலமான நிறுவனம்,இயக்குநர் ,மிரட்டலாக படம் எடுப்பவர் என்கிற பெருமைகளைத் தாண்டி பிரியங்கா சோப்ராவுக்கு அடுத்த கில்லி இவர்தான் என்று கொண்டாடப்படுகிற தீபிகா படுகோனே கிடைத்ததில் பிரபாஷுக்கு மிகவும் மகிழ்ச்சி .தீபிகாவுக்கும் இரட்டை சந்தோசம். இன்ஸ்டராகிராமில் இருவரும் கூடி கும்மாளம் போடுகிறார்கள்.