பாலிவுட்டில் சுஷாந்த் சிங் தற்கொலை. போதைப்பொருள் குற்றச் சாட்டு மற்றும் திரையுலக பிரபலங்கள் மீதான கைது நடவடிக்கை என இந்தி திரையுலகமே திணறி வருகிறது.
இவை போதாது என்று பிரபலங்களின் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த 2018-ஆம் ஆண்டு மீடூ இயக்கம் என்ற பெயரில்திரைத்துறை உள்பட பல்வேறு துறையைச் சார்ந்த பெண்களும், தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்து வெளிப்படையாக பேசினார்கள்.
இவ்விவகாரம் திரையுலகம் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன் நின்று போனது.
தற்போது இந்தித் திரையுலகின் மாடல் நடிகை டிம்பிள் பவுலா , பாலிவுட்டில் முன்னணி இயக்குநரான சஜித் கான் என்பவர் தன்னிடம், பாலியல் துண்புறுத்தலில் ஈடுபட்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஹவுஸ்புல் என்ற படத்தில் நடிக்க வைப்பதற்காக , தனக்கு 17 வயதாக இருந்த போது, அவர் தவறாக நடந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். ”இத்தனை காலம் மவுனமாக இருந்துவிட்டேன், இன்னும் பேசாமல் இருப்பது தவறு என நினைப்பதால், இப்போது இதை சொல்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார். சஜித் கான் மீது இதற்கு முன்பும் சில நடிகைகள் பாலியல் குற்றசாட்டுகளை முன் வைத்தது குறிப்பிடத்தக்கது.