கடந்த 2004 -ல் ஹரி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ’கோவில்’ திரைப்படம், முழுக்க முழுக்க கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக உருவாகியிருந்தது.இதன் பின்னர் கிராமத்து கதையில் நடிக்கவில்லை.
இந்நிலையில், இயக்குனர் சுசீந்திரன்,சிம்புவுக்கு முழுக்க,முழுக்க பரபரப்பான கிராமத்து கதை ஒன்றை கூறியுள்ளதாகவும்,அந்த கதை சிம்புவுக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும், உடனடியாக சிம்பு சுசீந்திரனிடம் சம்மதம் சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு தற்போது நடித்து வரும் ’மாநாடு’ படத்துக்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள் மேலும் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படமொன்றிலும் சிம்பு நடிக்க சம்மதம் தெரிவித்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.