
“என்னய்யா மனுஷன். சங்கத்தில் இல்லாத ஒருவரை பத்தி செத்தவருடன் ஒப்பிட்டு பேசுவது என்னடா கலாச்சாரம் ? குமட்டிக்கொண்டு வருது .அருவெறுப்பா இருக்கு. இனியும் இந்த சங்கத்தில் இருப்பது வேஸ்ட் ” என்று சொல்லி நடிகர் சங்கத்தில் இருந்து விலகிவிட்டார் நடிகை பார்வதி.
அப்படி என்னதான் நடந்தது சங்கத்தை விட்டு விலகுவதற்கு ?
மலையாள நடிகர் சங்கமாஹன அம்மா அமைப்புக்கு நிதி திரட்ட டுவென்டி 20 என்கிற படம் எடுத்தார்கள் கேரளத்தில். அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்படுவதாக இருக்கிறது. முதல் பாகத்தில் ஒரு நடிகை நடித்திருந்தார். அந்த நடிகையை காரில் கடத்தியதாக பிரபல நடிகர் திலீப் உள்பட சிலர் மீது வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.
நடிகர் சங்க செயலாளரான எட வேளா பாபுவிடம் “முதல் பாகத்தில் நடித்திருந்த ‘கடத்தப்பட்ட’ நடிகை இரண்டாம் பாகத்தில் இருக்கிறாரா என்கிற கேள்வி எழுந்தது .
அதற்கு பதிலளித்த பாபு ” நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லை .செத்துப்போன ஒருவரால் எப்படி நடிக்க முடியும் ?”என்று நக்கலாக பதில் சொன்னார்.
இந்த பதில் நடிகை பார்வதியை உசுப்பிவிட்டது. சங்கத்தை விட்டு ராஜினாமா செய்தார்.
காட்டமான கருத்தையும் வெளிப்படுத்தினார் .
“சங்கத்தினால் கைவிடப்பட்ட ஒரு நடிகையை இறந்துபோனவராக சித்தரிப்பது அநாகரீகமானது. அருவருப்பானது.ஆத்திரத்தை கிளப்புகிறது .குமட்டல் மனப்பான்மையைக் காட்டுகிறது. திருந்துவார்கள் என்று நம்பித்தான் இந்த சங்கத்தில் இருந்தேன் . ரம்யா நம்பீசன் ,கீது மோகன்தாஸ் ,ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட சில தோழிகள் விலகியபோது நான் மட்டும் இருந்தேன்.அது தவறு என்பதை உணர்கிறேன். நானும் இந்த சங்கத்தில் இருந்து விலகுகிறேன் “என சொல்லியிருக்கிறார்.
நியாயம்தானே முத்தப்பா?