கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி தொடர்ந்து நடந்து வந்த நிலையில், திடீரென படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து கொரோனாலாக்டவுன் காரணமாக இந்த இப் படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டது
தற்போது மீண்டும்தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு படப்பிடிப்புகள் நடந்து வரும் நிலையில், ’இந்தியன் 2’ படப்பிடிப்பு தொடங்குவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் லோகேஷ் கனகராஜ் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாகவும். சமீபத்தில் இப் படத்திற்கான போட்டோஷூட் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்ததாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் தற்போது லைகா பட நிறுவனத்திற்கு ஒரு கடிதம் எழுதி உள்ளதாகவும் அதில் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பை தொட ங்குவது குறித்து அறிவிக்காவிட்டால் தான் வேறு படத்தில் பணிகளை தொடங்க இருப்பதாகவும் அந்த கடிதத்தில் கூறியுள்ளதாக கூறப்படுகிறது
ஆனால் இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ள .லைகா நிறுவனத்தின் சிஇஓ கூறுகையில்,”இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்றும் ’இந்தியன் 2’படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பில் 500 முதல் 600 பேர் வரை கலந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளதால் இது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம் என்றும், கமல்ஹாசனிடம் நேற்று கூட இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்து ஆலோசனை செய்தோம் என்றும் ’இந்தியன் 2’படப்பிடிப்புக்கான திட்டமிடுதல் பணி தற்போது நடைபெற்று வருகிறது என்றும் கூறியுள்ளார்.