கங்கை -காவேரி இணைப்புத் திட்டத்துக்கு 1 கோடி கொடுப்பதாக முன்னொரு காலத்தில் சொன்னவர் நடிகர் ரஜினிகாந்த்.அதாவது காவிரி தண்ணீர் பிரச்னை தலை தூக்கிய கால கட்டத்தில்!
அதன்பின்னர் அவரும் மறந்து விட்டார். நாடும் மறந்து விட்டது.
ஒரே நாடு என்று கோஷம் போடுகிற பாரதிய ஜனதாவின் அஜெண்டாவிலும் அது இல்லை.
ரஜினியின் புதிய கட்சியின் தேர்தல் அறிக்கையில் அது இருந்தாலும் அது வெற்று முழக்கம்தான்.!அதற்கான சாத்தியமே இல்லை என வல்லுநர்கள் தெரிவித்து விட்ட பின்னர் அது காகித அளவில்தான் இருக்க முடியும்.
இந்த கங்கை -காவேரி இணைப்புத்திட்டம் பற்றி முன்னரே இதே சினிமா முரசத்தில் விரிவாக பேசியிருக்கிறோம்.
தற்போது அதைப் பற்றிய பிரச்னை கிடையாது .
நாம் சொல்ல வந்தது தமிழக கலைத்துறையில் மூன்று நதிகள் சங்கமித்த அதிசயம் ‘ஐ ‘படத்தில் நடந்திருக்கிறது.
பிரமாண்ட இயக்குநர் ஷங்கர்,இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் ,சீயான் விக்ரம் ஆகியோர் மூவரும் இணைந்து பணியாற்றியதையே அவ்வாறு குறிப்பிட்டோம்
தற்போது இந்த மூவரின் வாரிசுகளும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள்.
ஏ.ஆர்.அமீன்,துருவ் விக்ரம்,அர்ஜித் ஷங்கர் இவர்கள் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இணையத்தில் வைரல் இதுதான்.!
எதற்காக இந்த சந்திப்பு?
மூவரும் இணைந்து நடிக்கிறார்களா?