சிலம்பரசன் அப்பாவைப் போல கடுமையான பக்தராகி இருக்கிறார்.
எல்லா மாறுதலும் நன்மைக்கே!
ஈஸ்வரன் அருளால் மாநாடு சிறப்பாக முடிய நாமும் வேண்டிக்கொள்வோம்.
மார்கழியிலேயே பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு சென்று திரும்பிவிடுவார்கள் .சிலர் தையில் ஜோதி பார்க்க 48 நாட்கள் விரதம் இருப்பது உண்டு.
கொரானா வந்த பிறகு அய்யப்பனை தரிசிக்க கேரள தேவஸ்வம் போர்டு ,அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்கள் .முன்னைப்போல கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக்கொண்டு மலை ஏற முடியாது
ஒரு நாளைக்கு இத்தனை பேர்தான் அனுமதிக்க முடியும் என்கிற கட்டுப்பாடு இருக்கிறது.
இந்த நிலையில்தான் சிலம்பரசன் மாலை அணிந்து இருமுடி ஏந்தி சபரிக்கு புறப்பட்டுவிட்டார்.
இப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.