பாஜகவின் சாணக்கியர் சென்னைக்கு வந்த பின்னர் தேர்தல் உடன்பாடு சுமூகமாக முடியும் என்று பார்த்தால் வேண்டாத விருந்தாளி வந்த கதையாகி இருக்கிறது.
“அதிமுக அணியில் தினகரன் கட்சியையும் சேர்க்க வேண்டும் “என்பதில் அமித்ஷா விடாப்பிடியுடன் இருப்பதாக சொல்கிறார்கள்.
முடிவு எட்டப்படாமலேயே நட்சத்திர ஓட்டலில் நள்ளிரவு வரை நடந்த பேச்சு வார்த்தை கலந்திருக்கிறது.
அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிச்சாமி ,ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
மத்திய அரசின் உள்துறை பதவி ,கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஆகியவைகளை கையில் வைத்திருக்கிற அமித் ஷாவினால் தொகுதி உடன்பாட்டில் உடன்பாடு காணாமல் சறுக்கி விழுந்திருப்பது மேலிடத்துக்கே ஆச்சரியம்தான்.!
காரணம்?
அதிமுக கூட்டணியில் டி .டி.வி.தினகரனையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது அமித்ஷாவின் கட்டளையாம் .
“உளவுத்துறையின் ரகசிய அறிக்கைகள் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. தினகரன் ,சசிகலா கூட்டணிக்குள் வராமல் தேர்தலை சந்திப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.”என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களிடம் சொன்னாராம்.
“ஏற்க முடியாது”என்பதற்கான காரணங்களை எடப்பாடி சொல்ல முயற்சிக்கும்போது அதை ஷா ஏற்கவில்லை. இதை ஓபிஎஸ்சும்கண்டு கொள்ளவில்லை.அமைதியாக இருந்துவிட்டார்.
“சசிகலா பற்றிய எங்களின் முன்னதாகவே பிரதமர் மோடியிடம் சொல்லிவிட்டோம்” என்று எடப்பாடி சொன்னதும் “அப்படியானால் நான் டெல்லி சென்று பிரதமரிடம் பேசிவிடுகிறேன்” என சொல்லிவிட்டு பேச்சு வார்த்தையை முடிவுக்கு கொண்டு வந்து விட்டாராம் அமித்ஷா..