ஒரு தடவை மதுரை வடக்காடி வீதியில் சில வாலிபர்கள் “இந்த இடத்திலதான் நடிகை பத்மினி நின்னாங்களாம்”என்று சொல்லி அந்த இடத்தில் நிற்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு இருந்தார்களாம் .
அவர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை என்று சில இயக்குநர்களும் இருக்கிறார்கள்.
ஏஞ்சலினா ஜோலி என்கிற பிரபல ஹாலிவுட் நடிகை அவார்டுகளை குவித்த நடிகை. அவருக்கு தற்போது வயது 45. முகத்தில் முதிர்ச்சி தெரியும்.ஆனால் இளம் வயதில் அழகிலும் அழகு.பருவம் பூரித்து பொங்கும் காலமாக இருந்தது.
ஆந்திராவின் பிரபல இயக்குநர்களில் பூரி ஜெகநாத்தும் ஒருவர். தற்போது நடிகை சார்மியுடன் இணைத்துப்பேசப்படுகிறவர்.
பூரி ஜெகநாத் ஒரு தடவை வெனிஸ் நகரத்துக்கு சென்றிருக்கிறார்.
இனி அவரே சொல்வார் கேளுங்கள்.!!
“நான் ஒரு ஹோட்டலுக்கு சென்றிருந்தேன். டூரிஸ்ட் பட ஷூட்டிங்கிற்காக அங்கு தங்கியிருந்த ஏஞ்சலினா சில நிமிடங்களுக்கு முன்னர்தான் ஹோட்டல் அறையை காலி செய்திருக்கிறார் என்கிற செய்தியை சொன்னார்கள்,
நான் ஹோட்டல் மேனேஜரிடம் பேசி அந்த அறையை எனக்கு ஒதுக்கும்படி கேட்டு வாங்கினேன்.
ஏஞ்சலினா படுத்து உறங்கிய அந்த படுக்கையில் அமர்ந்துகொண்டு மேனேஜரிடம் பேசினேன். அந்த ஹோட்டலின் பெயர் டேனியல்”என்றார் பூரி ஜெகநாத்.அப்படியானால் அந்த பெட்டில் படுத்து எப்படியெல்லாம் கனவு கண்டிருப்பார்?
சார் நீங்க ரொம்பவும் ‘பச்சை’ !