
இன்னும் வாழ்க்கையில் அதிகாரபூர்வமாக இணையாவிட்டாலும் படங்களில் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள்
நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு நயன்தாரா மீண்டும் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார்.
இது இரட்டைநாயகிகள் கதை என்பதால் இன்னொரு நாயகியாக சமந்தா நடிக்கிறார்.
நயன்தாரா நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய தகவல் ஓன்று வெளியாகியுள்ளது.
ஈரம், வல்லினம், குற்றம் 23 உள்ளிட்ட படங்களை இயக்கிய அறிவழகன், கொரோனா லாக்டவுனுக்கு முன்பாக நயன்தாராவை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார்.
இக்கதை நயனுக்கு மிகவும் பிடித்துப்போக, முதல் கட்ட பணிகளையும் தொடங்க சொன்னதாக கூறப்படுகிறது.
,நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிடும் நெற்றிக்கண்,விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டுகாதல் மற்றும்மலையாளப்படம் ஒன்றின் பணிகளிலும் நயன்தாரா மிகவும் பிஸியாக இருந்ததால் இந்த படத்தின் பணிகள் அப்படியே முடங்கி விட்டன .
தற்போது நயன்தாரா திடீரென இயக்குனர் ஈரம் அறிவழகனை அழைத்து,அடுத்து உங்கள் படத்தில் தான் நடிக்கிறேன்.எனவே மீண்டும் நின்றுபோன பட பணிகளை உடனடியாக தொடங்குமாறும், இந்தப் படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லிவிட்டார் என்கிறார்கள்.
லாக் டவுன் தளர்வுகளுக்கு பின் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்












