
தமிழ்ச்சினிமாவில் கடுமையான போட்டியாளர்களில் ஒருவராக இருக்கிறார் நடிகர் தனுஷ்.
‘மயக்கம் என்ன’ படத்தை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் தனுஷ் ,அண்ணன் செல்வராகவன் தற்போது மீண்டும் இணைந்துள்ளனர்.
இவர்களது கூட்டணியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 20ல் தொடங்கவுள்ளதாக செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.
அதில் தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் இணைந்து லேப் டாப்பில் இப்படத்திற்காக படமாக்கப்பட்ட ஒரு காட்சியை பார்ப்பது போல உள்ளது. இந்நிலையில் இந்த போஸ்டரை பகிர்ந்துள்ள படத் தயாரிப்பாளர் தாணுவும் இந்த கூட்டணியுடன் பணியாற்றுவது பெருமை அளிப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவும் ‘நானே வருவேன்’ படம் குறித்த அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் செல்வராகவனுடன் 8 வது முறையாக இணைவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள யுவன், தற்போது நானே வருவேன் படத்தின் இரண்டாவது பாடலுக்காக பணியாற்றி வருவதாகவும், அந்த பாடல்களை படக்குழுவினருக்கும் போட்டுக் காட்ட ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நானே வருவேன் படம் குறித்த அறிவிப்பு கடந்த ஜனவரி 14ல் வெளியானது குறிப்பிடத்தக்கது.











