மாநாடு படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ள அடுத்தபடம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில்,அவரோ,அடுத்தாக , அடல்ட் காமெடி படத்தை இயக்கப் போகிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது.
அடல்ட் காமெடியாக உருவாகவுள்ள இப் படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும் இவருக்கு ஜோடியாக ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் ‘கோமாளி’ சம்யுக்தா மேனன் என இரு நாயகிகள் நடிக்க உள்ளனர் என்றும் குறுகிய காலக்கட்டத்தில் இந்த படம் எடுத்து முடிக்கப்பட்டு அடுத்ததாக பெரிய நடிகர் படத்தை இயக்குவார் வெங்கட் பிரபு என தகவல்கள் வெளியாகி உள்ளன.