நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோரது திருமணம் வரும் ஜூன் 9 ம் தேதி திருப்பதி திருமலை கோவிலில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. திருமண நடக்கிற இடத்தை இன்று முன்பதிவு கொண்டிருக்கிறார்களாம் .இவ்விருவரின் லிவிங் டுகெதர் வாழ்க்கை ஜூனில் முடிவடைய இருக்கிறது. கிட்டத்தட்ட இருவருமே வயது நாற்பதினை நெருங்கிவிட்டவர்கள்தான்..
கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நயன்தாரா, கடந்த 2004-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதையடுத்து வெளிவந்த சந்திரமுகி படம்தான் நயனுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது.அதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்ததும் ஒரு காரணம்தான்,!படிப்படியாக சூர்யா ,விஜய் ,அஜித் என உச்சநடிகர்களுடன் நடித்து தனது ஊதியத்தை உயர்த்திக்கொண்டார்.இன்று 7 கோடி வரை சமபலம் வாங்குகிறார் என்கிறார்கள். தென்னிந்திய மாநிலங்களில் இவருக்கு திரையுலகில் தனித்த செல்வாக்கு இருக்கிறது.
திரையுலகில் வெற்றிகரமாக வளம் வந்த இவருக்கு சொந்த வாழ்க்கை சோகம் நிரம்பியதுதான். சிலம்பரசன் ,பிரபுதேவா இருவருடன் காதல் வாழ்க்கை வாழ்ந்து தோல்வி கண்டவர். பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காகவே சிரியன் கிறிஸ்துவரான நயன் மதம் மாறினார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்ட நயன்தாரா. 7 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே வீட்டில் லிவிங் டு கெதர் பாணியில் வாழ்ந்து வருகின்றனர் . கடந்தாண்டு உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது.
விக்னேஷ் சிவனை தனது பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைத்தபோது . நயனின் அப்பா உடல் நலமின்றி இருந்தார், இதனாலேயே விரைவில் திருமணம் செய்துகொள்ளமுடிவு செய்யப்பட்டிருக்கிறது.
நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் வருகிற ஜூன் மாதம் 9-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருப்பதியில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது என்றும் .கடந்த வாரம் திருப்பதிக்கு சென்ற நிலையில், இன்று காலை மீண்டும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணதிற்கான முன்பதிவு செய்து கொண்டதாகவும் இதையடுத்து அங்கு திருமண ஏற்படுகளை பார்வையிட்டதாகவும் கூறப்படுகிறது.இது குறித்த தகவலை அவர்களுடன் கோவிலுக்கு வந்தவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நயன்தா