
நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில்,பாரதிராஜா , விஜய் ஆண்டனி, சத்யராஜ், இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்’ படப் பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமாகி இருக்கிறது.
படப் பிடிப்பை கிளாப் அடித்து துவக்கி வைத்திருக்கிறார் தமிழ் நாடு உணவு துறை அமைச்சர் .சக்கரபாணி.
திண்டுக்கல்லிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூத்தம்பூண்டி ஊரிலுள்ள சிவன் கோவிலில் ஆரம்பமான இதன் படப் பிடிப்பு திண்டுக்கல்லை சுற்றி தொடர்ந்து 30 நாள்கள் நடைபெறுகிறது.
முதல் நாள் படபிடிப்பில் விஜய் ஆண்டனி, தெலுங்கு சூப்பர் ஹிட் ‘ஜதி ரத்னலு’ திரைப்படத்தில் நடித்த ஃபரியா அப்துல்லா ஆகியோர் பங்கேற்றார்கள்.
தொடர்ந்து, சத்யராஜ், பாரதிராஜா, மற்றும் ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, அறந்தாங்கி நிஷா மற்றும் பலர் கலந்துகொள்கிறார்கள்.
1980 கால கட்டங்களில் நடக்கும் கதையாக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு, மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப் பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.
இதையடுத்து, கொடைக்கானல்,தேனி,காரைக்குடி,கோபிசெட்டிபாளையம்,பழநி ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது..
எழுத்து, இயக்கம் : சுசீந்திரன்
இசை :.இமான்
ஒளிப்பதிவு : விஜய் . சக்கரவர்த்தி
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு : தாய் சரவணன்.












