புதுச்சேரி மாநில தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு இடங்களில் 9 புதிய மக்கள் இயக்க பெயற்பலகையை அகில இந்திய பொதுச் செயலாளர் .புஸ்ஸி ஆனந்து திறந்துவைத்து பிரியாணி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் தொகுதி தலைவர் . வசந்த் மேற்பார்வையில் ௨ புதிய மக்கள் இயக்க பெயற்பலகை திறக்கப்பட்டு அரியங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திபாஸ்கர் என்கிற தட்சணாமூர்த்தி தலைமையில் 200 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் 500 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி ,300 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் , 20விவசாயிகளுக்கு உரம் மூட்டைகள்
300 குடும்பங்களுக்கு ஒரு நபர்க்கு 3கிலோ அரிசி, 100 நபர்களுக்கு பிளாஸ்டிக் வாளி , 300 நபர்க்கு பிளாஸ்டிக் குடம் மற்றும் நீர்மோர் என வழங்கப்பட்டது.
அதன்பின் இரண்டாம் கட்டமாக :
மணவெளி தொகுதி வசந்த் மேற்பார்வையில புதிய பெயர் பலகை திறக்கப்பட்டு 200 பெண்களுக்கு புடவை ,300 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி, 800 மாணவ மாணவிகளுக்கு நோட்புக் பென்சில் பேனா வழங்கப்பட்டது.
அதன்பின் மூன்றாம் கட்டமாக :
ஏம்பலம் தொகுதியை சேர்ந்த .கிருஷ்ணசாமி ஏற்பாட்டில் புதிய மக்கள் இயக்க பெயற்பலகை திறக்கப்பட்டு அப்பகுதியை சேர்ந்த 700 ஏழை எளிய மக்களுக்கு சிக்கன் பிரியாணி, 700 பெண்களுக்கு புடவை, 700 நபர்களுக்கு வேட்டி, 700 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்புக், பேனா, பென்சில் வழங்கப்பட்டது.,
ஏம்பலம் தொகுதியில் புதிய மக்கள் இயக்க பெயற்பலகை திறக்கப்பட்டு அப்பகுதியை சேர்ந்த 350 ஏழை எளிய மக்களுக்கு புடவை, 500 நபர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி, 400 மாணவ மாணவிகளுக்கு நோட்புக், பேனா,பென்சில ஸ்கேல், ரப்பர் மற்றும் 300 பொது மக்களுக்கு லட்டு வழங்கப்பட்டது. இப்படியாக நலத்திட்ட உதவிகள் தொகுதி முழுவதும் நடந்தது,
விஜய் நற்பணி என்றாலே பிரியாணிக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது.