நடிகை நமிதாவின் வளைகாப்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.மச்சான் நடிகை நமீதாவேதான். லேட்டாக திருமணம் என்றாலும் லேட்டஸ்ட்டாக மகிழ்ச்சியான செய்தியுடன் சென்னையில் விழா நடத்தினார்.
ராதிகா சரத்குமார், ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி, நடிகர் ஆரவ், இயக்குநர் பாக்யராஜ் குடும்பத்தினர் , டான்ஸ் மாஸ்டர் கலா எனப் பலர் கலந்து கொண்டு நமிதாவை வாழ்த்தினர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ஸ்ரீகாந்த் பேசுகையில், “நமிதாவைப் பல ஆண்டுகளாக எனக்கு தெரியும். அவளும், நானும் நிறைய படங்களில் பணியாற்றியிருக்கிறோம். நமிதா ஒரு குழந்தை மாதிரி.
இப்போது அவளுக்கே ஒரு குழந்தை பிறக்கப் போகிறது. எல்லோரும் நமிதா ஒரு டாமினண்ட் பர்சன் என்று தான் நினைப்பார்கள். ஆனால் அவ ஒரு குழந்தை மாதிரி. அவ சாக்லேட் திருடி கூட நான் பார்த்திருக்கிறேன். ஒருமுறை லங்காவியில் ஒரு கிலோ சாக்லேட் வாங்கினாள். நமிதா என்ன இது ஒரு கிலோ சாக்லேட் ? என்று கேட்டேன். “ஆமா டா, சாப்பிட வேணும்ல?” என்று குழந்தை போல் சொன்னாள். அது தான் நமிதா” இவ்வாறு நடிகர் ஸ்ரீகாந்த் பேசுகையில் நமீதாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது.