
இயக்குநர் என்.லிங்குசாமி . ஆனந்தமாக திரை உலக வாழ்க்கையைத் தொடங்கியவர். ஆந்திராவிலும் படம் எடுத்தவர். பலவித கஷ்டங்கள் ,நஷ்டங்கள் என கடந்த இவர் கடனாளியாகி விட்டார் ,கிட்டத்தட்ட 85 கோடிகளுக்கு கடனாளி என்கிறது கோலிவுட்.
நடிகர் ராம் பொத்தினேனிஎன்கிற தெலுங்கு நடிகர் நடித்திருக்கும் திரைப்படம் “தி வாரியர்”. சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சிட்துரி தயாரித்துள்ளார். பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார்.லிங்குசாமி இயக்கி இருக்கிறார்.
கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதி பினுஷெட்டி வில்லனாக நடித்துள்ளார்.தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
பலவிதமான தடைகளை கடந்துதான் வெளியாகவேண்டும் . லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் முந்தைய சிக்கல்கள்தாம் இதற்கு காரணம் என்கிறார்கள். படம் வெளியாகும் போது கடனை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று முன்னரே திரையுலக கூட்டமைப்பினர் நிபந்தனை விதித்திருந்தார்கள் .
அவர்கள் நிறுவனத்தில் படம் வெளியாகும் நேரங்களில் அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைக்க வேண்டும் என்று ஏற்கென்வே திரையுலகக் கூட்டமைப்பினர் சொல்லியிருந்தார்கள்.
இந்நிலையில் இந்தப்படத்தை இயக்கியதோடல்லாமல் இப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையையும் லிங்குசாமி நிறுவனம் வாங்கியதால் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. நான்கு கோடியை கட்டினால்தான் வாரியார் படம் வெளியாகும் என்கிற கண்டிஷன் போட்டிருக்கிறார்கள். இதை லிங்குசாமியும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.கட்டிவிட்டதாக சொல்கிறார்கள்.
இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமை விற்பனையும் மந்தமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
சேலம், திருச்சி ஆகிய விநியோகப்பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் படத்தைத் திரையிட விநியோகஸ்தர்கள் முன்வரவில்லை என்று சொல்லப்படுகிறது.
அதன்காரணமாக அந்தப்பகுதிகளில் படத்தை வெளியிட்டுக் கொடுக்குமாறு ரெட்ஜெய்ண்ட் நிறுவனத்திடம் கேட்டார்களாம்.அவர்களோ ஏகப்பட்ட சிக்கல் உள்ள இந்தப்படத்தை வெளியிடவேண்டாம் என்று முடிவுசெய்து அதை லிங்குசாமி தரப்பிடமும் சொல்லிவிட்டார்களாம்.
இதனால் கடைசிநேர நெருக்கடியில் சிக்கித் தவித்திருக்கிறது வாரியர் படம் என்கிறார்கள்.












