“ஆத்தா நான் ஹீரோ ஆயிட்டேன் “என்று துள்ளிக்குதிக்காத குறைதான்.சூரி நண்பர்களுக்கு பார்ட்டி வைத்து அசத்தினார். ஆனால் சூரி ஹீரோ என்றால் பிசினஸ் ஆகாது என்று நினைத்தார்களோ என்னவோ மக்கள் செல்வன் விஜய்சேதுபதியை உள்ளுக்கு இழுத்துக்கொண்டார் இயக்குநர் வெற்றிமாறன். இசை இளையராஜா .
ஆர் எஸ் இன்போடெயிட்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிற இப்படம் இரண்டு ஆண்டுகளை கடந்து இன்னமும் மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது. 60 நாள் படப்பிடிப்பு என்றார்கள் .ஆனால் கன்னித்தீவாய் கடந்து கொண்டிருக்கிறது.
நாயகன் சூரி என்றவரது காட்சிகளை கட் செய்து விட்டு விஜய்சேதுபதியின் பகுதிகளை அதிகமாக்கியதால் படப்பிடிப்பு நீள்கிறது.
வெற்றிமாறனுக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் மனக்கசப்பு வந்தது.இப்படி இழுத்துக் கொண்டே போனால் செலவு அதிகமாகாதா ,வட்டிக்கு குட்டி பிறந்து விடுமே என்று தயாரிப்பாளர் கசந்து கொள்ள, ,வெற்றி மாறன் விடுதலையை ரெண்டு பாகமாக எடுத்துத்தருகிறேன் என்று வாக்கு கொடுத்ததாக சொல்கிறார்கள். அறிவிப்பும் வந்தது.
தமிழகமெங்கும் உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். ஜனவரி 26 ரிலீஸ் செய்துகொள்ளலாம் என்று ரெட் ஜெயண்ட் சொல்லியிருக்கிறது.
இதை வெற்றிமாறனிடம் சொல்ல “தற்போது நடக்கும் படப்பிடிப்பே முதல் பாகம் தான்”என்று சொல்ல தயாரிப்பாளருக்கு பிபி எகிறிவிட்டது.
வெற்றிமாறனுக்கு இருந்த நல்ல பெயர் டேமேஜ் ஆகிக்கொண்டிருக்கிறது.