டி .வி .சீரியல்ஸ் எல்லாமே சொட்டையும் சொத்தையுமா சொதப்பிக்கிடக்கிதுன்னு சினிமாவுக்குப் போனா டைரக்டர் பொன்ராம் சவுக்கால விளாசுறார். இந்த விஜய்சேதுபதிக்கித்தான் என்ன ஆச்சு ?வந்தது வரட்டும் பொட்டி நெறம்புனா சரின்னு கரன்சி மேல அக்கறை காட்டுறார் போல.!
திண்டுக்கல்லில் பூக்கடை நடத்துற இளவரசுவின் மகன் விஜய் சேதுபதி..இவருக்கும் மொரட்டு முட்டை ரவிக்கும் ஆகாது.விரோதம்.!பொம்பளைகளை மட்டும் கை வைக்க மாட்டேன்னு கொலை ,கொள்ளை ,ஆள்கடத்தல் ,நாட்டு வெடிகுண்டு தயாரித்தல் என சட்ட விரோத செயல்கள் எல்லாம் சகட்டு மேனிக்கு செய்ற முட்டை ரவி ச.ம.உ .ஆனா என்ன நடக்கும்?
இப்படி போகிற கதை எல்லாமே பழைய ஸ்டாக் .ரொம்பநாள் கோடவுனில் கிடந்திருக்கு.!
விஜய சேதுபதி ஆரம்ப காட்சிகளில் ,நாயகி பேக்கரி அனு கீர்த்திவாசை மிரட்டியபடி விரட்டி காதலை வளர்ப்பது ,டிஎஸ்பி.யாக வில்லன் வகையறாக்களை துவையல் போடுவதுமாக அவரது முத்திரையை பதித்திருக்கிறார். டிஎஸ்பியாக ஜாவா பைக்கில் ஆள் செம கம்பீரம்.!
அறிமுக நாயகி அனு கீர்த்திவாஸ் ஓவர் ஆக்டிங்.யாரோ கீர்த்தி சுரேஷ் மாதிரி இருக்கிறே னு சொல்லிருப்பாய்ங்க போல.!
பாகுபலி பிரபாகர் வழக்கமான வில்லன்..
சிங்கம் புலி ,விஜய் டி.வி .புகழ்,தீபா மற்றும் சிங்கம் புலி இவர்கள் காமடி செய்கிறார்களாம் .
இளவரசு ,தமிழ்ப் பேராசிரியர் கு.ஞான சம்பந்தம் ஆகியோர் தங்களது கடமையை செய்திருக்கிறார்கள். பேராசிரியர் இன்னும் எத்தனை படங்களில் நடித்து தமிழுக்கு சேவை செய்யப்போகிறாரோ?
திடீர் பிள்ளையார் மாதிரி விமல் .பால் வியாபாரி.
இமான் இசை . சொல்லும்படி இல்லை ப்ரோ .!
திறமையான நாயகன்,நடிகர்கள் ,டெக்னிஷியன்கள் ,பெரிய தயாரிப்பு நிறுவனம்,கார்த்தி சுப்புராஜ் இருந்தும் இயக்குநர் ஜோல்னா பை கதையை கொடுத்து இருக்கிறாரே.
போங்க சார்.!
–தேவிமணி