
உலகநாயகன்கமல்ஹாசனின் விக்ரம் 2 படத்துடன் மோதினால் விபரீதம் நடந்து விடுமோ என்கிற பயம் வந்திருக்கிறது , லியோ படக்குழுவினருக்கு.!
காஷ்மீரில் ஏற்பட்ட கடுமையான நில நடுக்கத்திலிருந்து லியோ படக்குழுவினர் மீண்டிருக்கிறார்கள், “பிளடி எர்த்கேக் “என்று திட்டி விட்டு படப்பிடிப்பில் இறங்கியிருக்கிறார்கள் .லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முரட்டுத்தனமாக வளர்ந்து கொண்டிருக்கிறது லியோ. விஜய்யுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட பல வில்லன்கள் மோதிக்கொண்டிருக்கிறார்கள்.
லியோ படத்தின் ரிலீஸ் தேதியை முன்கூட்டியே அறிவித்துவிட்டார்கள். அதுதான் ஏழரையை கூட்டுமோ என்கிற அச்சம் வந்திருக்கிறது.
இந்த முறை உலக நாயகன் கமல் ஹாசனுடன் விஜய் நேருக்கு நேர் மோதும் நிலை வந்து விடுமோ என்று படக்குழுவினர் பதறுகின்றனர். விஜய் படத்துடன் ஏகே 62 படம் தான் மோதும் என எதிர்பார்த்த நிலையில், இதுவரை அஜித் படம் ஆரம்பிக்க கூட இல்லை.அறிவிப்பும் வரவில்லை.இதனால் சோலோவாக காலம் இறங்கி கல்லாவை நிரப்பலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தனர்.இப்ப அங்கதான் வில்லங்கம் வந்திருக்கிறது.இந்தியன் 2 தீபாவளிக்கு வந்து விடும் .லியோ அதற்கு முன்னதாக வந்து விடுகிறது.முன்னதாக வந்தாலும் 20 நாள் இடைவெளியில் கல்லா கட்டினாலும் அதற்கு பின்னர் உலகநாயகனுடன் மோதுகிற நிலை. ஷங்கரின் இயக்கம். கமல்ஹாசனின் அளப்பரிய நடிப்பு ,மாஸான சண்டைக்காட்சிகள் எல்லா மக்களும் எதிர்பார்க்கிற படம் .இதனால் லியோ படம் படுத்து விடுமோ என்கிற பயம் வந்திருக்கிறது என்கிறார்கள்.இந்தியன் படத்துக்குத்தான் தியேட்டர்காரர்களும் முதலிடம் கொடுப்பார்கள்.
இதனால் லியோ குழுவினர் பயத்தில் இருக்கிறார்கள்.ஆனால் கமலின் ரசிகர் லோகேஷ் என்பதால் மோதல் தவிர்க்கப்படும் என்று ஒரு தரப்பினர் சொல்லுகிறார்கள்.