நடிகைகள் பச்சை குத்திக்கொள்வது அதிசயமில்லைதான்.ஆனால் என்ன பச்சை ,அது எந்த இடத்தில் குத்திக் கொள்ளப் பட்டுள்ளது என்பதை பொருத்துதான் முக்கியத்துவம் பெறுகிறது.
சில பெண்கள் அவர்களுக்கு வரப்போகிற கணவன் கண்களுக்கு மட்டுமே தெரிகிற ரகசிய இடங்களில் பச்சை குத்திக் கொள்கிறார்கள்.
உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் கையில் புதிய பச்சை குத்தியிருக்கிறார். அப்பா கமல் கடவுள் மறுப்பாளர்.கடவுள் இருந்தால் நல்லதுதான் என்று சொல்கிறவர்.
“எப்பவும் ஆண்டவன் சைடுல நிக்கிறவ. நான் முருக பக்தை.அதனால் தெய்வீக வேலினை குத்தியிருக்கிறேன்”என்கிறார் ஸ்ருதிஹாசன்.