ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே 3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில்,நீண்ட வருடங்களுக்குப் பின் ஐஸ்வர்யா இயக்கி வரும் புதிய படம் ‘லால் சலாம்’. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வருகிறார்.
லால் சலாம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் தொடங்கியது. பின்னர் மும்பையில் ரஜினி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டது.
இந்நிலையில் திருவண்ணாமலையில் லால் சலாம் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு ரஜினி திருவண்ணாமலை சென்றுள்ளார்.
கடந்த சில தினங்களாகவே அங்கு அவரைக் காண ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை நடிகர் ரஜினிகாந்த்,தனது மனதுக்கு மிகவும் நெருக்கமான அண்ணாமலையார் – உண்ணாமலை அம்மன் கோயிலில் வழிபாடு செய்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் ரஜினிகாந்த்,மறைந்த நடிகர் மயில்சாமியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு நான் திருவண்ணாமலை சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது மயில்சாமியின் ஆசை அதை சீக்கிரமாக நிறைவேற்றுவேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்துள்ளார் இதையடுத்து அவரது ரசிகர்கள் ஒரு வழியாக பல மாதங்கள் கழித்து மயில்சாமியின் ஆசையை நிறைவேற்றி விட்டார் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.