காஷ்மீரில் ‘மினி சுவிட்ஸர்லாந்து’ என அழைக்கப்படும் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திரைப் பிரபலங்களும் தாக்குதல் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி,தனது சமூக வலைதளத்தில் “காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும் பாகிஸ்தான் பொது மக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களும், நம்மைப் போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். வெறுப்பைக் கடந்து மனிதத்தை வளர்ப்போம்” எனத் தெரிவித்து இருந்தார் இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனியின் இந்த கருத்துக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில் இன்னொரு தரப்பினர், ‘பாகிஸ்தான் மக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று கூறியதால் விஜய் ஆண்டனியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது.இந்நிலையில் இது குறித்து நடிகர் விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,”என் பதிவை தவறாக புரிந்துகொண்டவர்கள் கவனத்திற்கு, ‘காஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையை செய்த, அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம், நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும். இந்திய அரசும் நாமும், நம் வலிமையான கரங்களால் நம் இறையான்மையை பாதுகாப்போம்’.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்