தமிழ்ச்சினிமா மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது.
விஜய் அடுத்த முதல்வர் ஆவாரா என்கிற ஆர்வத்தை விட கூலி வெல்லுமா ,வீழுமா என்கிற முடிவுதான் மிகப்பெரிய கவலை.
போட்ட முதல் முதலை வாயில் சிக்கிய மானின் இரை ஆகிவிடக் கூடாது என்கிற தவிப்பில் சன் குழுமம் இருப்பதாக சொல்கிறார்கள். மிகப்பெரிய தொகையை போட்டிருக்கிறார்கள்.
இந்திய துணைக்கண்டத்தின் மிகப்பெரிய ,ஆகச்சிறந்த நடிகர்கள் நடிக்க வைக்கப்பட்டி ருக்கிறார்கள்.
ஆமீர் கான் பைட் பண்ணி பார்த்ததில்லை. இன்னும் சொல்லுவது என்றால் அவருக்கு சண்டை போட வராது . மென்மையான வேடங்கள் . சமூக அக்கறை இருக்கும். அவரை முரட்டு முத்தையாவாக புகைக்க விட்டிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ஆமிர்கான் தோற்ற ஸ்டில் கடுமையாக இருக்கிறது. வெற்றிக்கு இவரும் முக்கியமாக இருக்கலாம்.
இப்படி ஆந்திரத்து நாகார்ஜுனா ,கன்னடத்து உபேந்திரா ,சவுபிர் ஷகீர் ,என பலருடன் நம்ம ஊரு சத்யராஜ், ஷ்ருதி ஹாசன் , ஸ்டைல் கிங் ரஜினிகாந்த் . கதை ரஜினியை சுற்றியது. விக்ரம் வெற்றியை பார்த்து ரஜினி ஆசையுடன் லோகேஷ் கனக ராஜூடன் சேர்ந்திருக்கிற படம். 1000 கோடி என ரஜினியின் ரசிகர்கள் கணித்திருக்கிறார்கள்.
ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு சரியான தீனியை லோகேஷ் நிச்சயம் கொடுப்பார். ஏனென்றால் அவர் கமல்ஹாசனின் ரசிகர் .
எதிர்மறையான முடிவு ( ? ) என்றால் அதிகமாக பாதிக்கப்படுகிறவர் உலகநாயகனாக தான் இருப்பார். ரஜினியின் ரசிகர்கள் வெறி கொண்டவர்களாக ஆடுவார்கள். ஆக லோகேஷ் கவனமாகவே களம் ஆடியிருப்பார் .












