நிஜ தாதாக்களே நடிகர்களாக நடித்து படம் பார்த்ததுண்டா? அப்படி ஒருபடமாக உருவாகியிருப்பதுதான் ‘சபரன்’.இந்தப் படத்தை கதை எழுதி
தயாரித்துள்ளது முதல் நடித்துள்ள நடிகர்கள் வரை பலரும் நிஜதாதாக்கள்தான்.தன்ஹா மூவீஸ் சார்பில் படத்தை கதை எழுதி கதாநாயகனாக நடித்துதயாரித்துள்ளவர் அம்ஜத் கே.பி என்பவர். இவர் கேரளாவில் பிரபல தாதா.’சபரன்’ படத்தை இயக்கியுள்ளவர் ஆர்.புவனேஷ். இவர் ஏற்கெனவே தமிழில்’ஆறாவது வனம்’ ,மலையாளத்தில் ‘பகவதிபுரம்’ படங்களை இயக்கியவர்.இப்படத்தின் கதை என்ன?கோவை அருகே ஒரு குண்டுவெடிப்பு நடக்கிறது. அது பற்றி புலனாய்வு செய்யபுறப்படுகிறார் ஒரு போலீஸ் அதிகாரி. விசாரணை செய்யத் தொடங்கினால் தோண்டத்தோண்ட புதையல் கிடைப்பது போல பல நிழல் உலக தாதாக்கள், பலநாட்டுதீவிரவாதிகள், அரசியல் புள்ளிகளின் தொடர்புகள், அரசியல்வாதிகளின் தேச
துரோகங்கள் எல்லாம் அம்பலமாகின்றன. ஆணிவேர் எது என்று கண்டறியும்முயற்சியே ‘சபரன்’ படக்கதை.’சபரன்’ என்றால் வேட்டைக்காரன். ஒரு
வேட்டைக்காரனாய் எழுந்து புறப்பட்டு நாசகார கும்பலை வேரறுப்பவன்தான் இந்தநாயகன் ‘சபரன்’.இப்படத்தில்,புதுமுகங்கள் பிரஷாந்தி, தீபிகா என்கிற மாடல்கள் இருவர் நடித்துள்ளனர்.பிரதான வில்லனாக டார்வின் க்ரூஸ் நடித்துள்ளார். காதல் தண்டாபாணி,அப்புக்குட்டி, வின்சென்ட் அசோகன், தலைவாசல்விஜய், போஸ் வெங்கட்ஆகியோரும் நடித்துள்ளனர் . துபாயில் உள்ள நிஜமான தாதாக்களும்நடித்துள்ளனர்.
“சினிமா ஆசையில் ஒரு அப்பாவி டைரக்டரை மிரட்டி தன்னை கதாநாயகனாக்கும்ஒருவனின் கதைதான் ‘ஜிகர்தண்டா’ . அதைப் போலத்தான் என்னையும் கடத்தாத குறையாக கேரளாவில் ஒரு படகுவீட்டில் ஒரு நாள் அடைத்து வைத்துமிரட்டாத குறையாக ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். ஒரு வகையில்டைரக்டர் ஆக்கினார்கள் எனலாம்.கதை, திரைக்கதை, லொக்கேஷன் எல்லாம் தயார்செய்து வைத்திருந்தார்கள். நீடைரக்ட்செய்தால் போதும் என்றார்கள். அப்படி என்னை சிக்க வைத்த படம்தான் சபரன்”’ ஆனால் , எனக்கு எல்லா வசதியும் கொடுத்தார்கள்.படப்பிடிப்பில் சம்பளத்தில் எந்தக்குறையும் வைக்கவில்லை. “என்கிறார்.இயக்குனர் ஆர்.புவனேஷ்.இசை பி.பி. பாலாஜி,பாடல்கள் புவனேஷ். ஸ்டண்ட் சுப்ரீம் சுந்தர், நாக்
அவுட் நந்தா, நடனம் பாபி, நிர்மல், அருண்.இப்படம் மார்ச் மாதத்தில் வெளியாகவுள்ளது.