Sunday, April 19, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“உம் வினை உம்மைச்சுடுக!” நிர்மலாவுக்கு கமல் சாபம்.!

admin by admin
February 5, 2026
in News
421 4
0
590
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியத் துணைக்கண்டத்தின் ஜனநாயகப் பேரவையான பாராளுமன்றத்தில் மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன்  தன்னுடைய கன்னிப் பேச்சினால் அவையை அதிர வைத்தார்.

தமிழர்களை கொச்சைப் படுத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தக்க பதில் தந்தார் .சாபமும் தந்தார். !தமிழை தாழ்த்திப்பேசியவரை தாய் தடுத்தாலும் விடேன் என்கிற வெறி அவரது குரலில் இருந்தது.

You might also like

ரன்பீர் கபூர் – ஆலியா பட் நடித்த ‘லவ் & வார்’ ஜனவரி 2027ல் வெளியாகிறது!

‘சிங்கா’ படத்தின் ‘டீசர்’ வெளியானது!!

திருமணம் ஒரு முற்றுகை இடப்பட்ட கோட்டை ! கவிப்பேரரசு வைரமுத்து பரபரப்பு பேச்சு!!

அவரது கன்னிப்பேச்சின் முழுமை இதோ …உங்களுக்காக !

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே,
இந்த அவையின் கௌரவம் மிக்க உறுப்பினர்களே,
என்னை இந்தப் பதவிக்குப் பரிந்துரைத்து, இந்த அவையில் அமரச் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த எமது கூட்டணிக் கட்சியின் மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, மற்றும் அவையினரே… இந்தத் தருணத்தை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

நன்றி இங்கு வர இயலாது போன என் தமிழர் தலைவர்களுக்கும்

நன்றி அருமை சகோதரர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களே…

நன்றி எனது அன்பிற்குரிய தேசமே…

பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் மக்கள் சார்பாகப் பேசுவதற்காக இந்த அவைக்குள் நுழையப் பல கதவுகள் திறக்கின்றன. எனக்குத் திறந்த கதவு திரைத்துறையின் கதவு. பரமக்குடியில் பிறந்த ஒரு குழந்தையை, சினிமா புகழ்வெளிச்சத்திற்கு அழைத்துச் சென்றது. அங்குதான் எனக்கு சினிமாவும், எங்களது தமிழ் வரலாறும் அறிமுகமானது.

அப்போது ஒரு குழப்பமான யதார்த்தத்தை நான் உணர்ந்தேன். “இந்தியா மாநிலங்களின் ஒன்றியம்” என்று நமது அரசியல் சாசனம் வழங்கிய வாக்குறுதிகள், நிஜத்தில் பிரதிபலிக்கவில்லை என்பதே அந்த யதார்த்தம் .

பல தமிழாசிரியர்கள் எனக்கு என் மொழியை அறிமுகப்படுத்தினார்கள். மகத்தான அரசியல் தலைவரான திரு. சி.என். அண்ணாதுரையும் அவர்களுள் ஒருவர். பிரஞ்சு மொழியில் ‘D.U.R.A.I’ (du Rai உச்சரிப்பில் Dukhwa) என்றால் அரசன் என்று பொருள். அவர் அரசராகப் பிறக்கவில்லை, ஆனால் தமிழர்களாகிய நாங்கள் அவரை எங்கள் மனங்களில் அரசராக முடிசூட்டினோம்.

எங்களது மொழி, கலாச்சாரம் மற்றும் உரிமைகள் மீது நிகழ்த்தப்படும் எந்தவொரு ஊடுருவலையும் எப்படி எதிர்கொள்வது என்று அண்ணா எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். தமிழ் மீது கொண்ட பற்று என்னை அவரை நோக்கி உந்தித்தள்ளியது. ஏறக்குறைய 57 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று இந்தப் பெருமக்களிடையே பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. நேற்று, பிப்ரவரி 3 (1969), எனது சித்தாந்தமான ‘மய்யவாதத்தின்’ (Centrism) தந்தைகளில் ஒருவரான அவர் என்னை அநாதையாக விட்டுச் சென்ற நாள். அப்போது எனக்கு வயது 14 தான், ஆனால் அவர் எனக்காக என் சகோதர சகோதரிகளை விட்டுச் சென்றார்.

அவர் பேசிய அதே அவையில் இன்று நான் பேசுகிறேன்.

நான் நடுங்கிக் கொண்டு நிற்கிறேன். அது மேடை அச்சத்தால் அல்ல, உணர்ச்சியால். எனது உணர்ச்சிப் பெருக்கை அப்படியே வார்த்தைகளாகக் கொட்டாது அமைதியான மொழியில் இதை எழுதியுள்ளேன். என்னுள் மையம் கொண்ட புயல், வார்த்தைகளாக வெளிப்பட்டால் நீங்கள் அதை அவமானம் என சொல்வீர்கள்.

எனது கொள்ளுத் தாத்தா திரு. எம்.கே. காந்தி அவர்கள், எங்களது தலைவர் அண்ணாதுரை அவர்கள் மறைவதற்கு நான்கு நாட்களுக்கு முந்தைய தேதியில்தான் மறைந்தார். நான்கு நாட்களுக்கு முன்புதான் காந்திக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, “Lead on Gandi “காந்தியே வழிநடத்துங்கள்” என்று தொலைக்காட்சியில் கூறினேன். இன்று 4-ம் தேதி, அண்ணாவின் மகன்களில் ஒருவனாகவும், காந்தி , பெரியாரின் கொள்ளுப் பேரனாகவும் உங்கள் முன் நிற்கிறேன்.

இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. எனது ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட்ட, ஈர்க்கப்பட்ட நான் இப்போது இந்த மாநிலங்களவையில் பேசுகிறேன். “பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய இவனுக்குப் பொருளாதாரத்தைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?” என்று நீங்கள் கேட்கலாம். அது அப்படியே இருக்கட்டும். இருப்பினும், நீங்கள் பயின்ற பல்கலைக்கழகங்களுக்கு வெளியே பயின்ற ஒரு மாணவனாக, ஒரு தமிழனாக எனக்கு ஒரு கருத்து உண்டு.

இந்த உரையை ஆத்திரமில்லாமல் எழுத காந்தி உதவினார். தர்க்க ரீதியாகக் கட்டமைக்க தந்தை பெரியார் உதவினார். இந்தக் கட்டிடத்தைப் புரிந்து கொள்ள அறிஞர் அண்ணா உதவினார்.

இந்த அவை, நமது சுதந்திரப் போராட்டத்தில் பங்கு யாருடையது என்பது குறித்து மீண்டும் மீண்டும் வழக்காடிக்கொண்டிருக்கிறது. நண்பர்களே…நாம் பேசிக்கொண்டிருக்கும் அந்தப் பழைய காலத்தில் நம்மில் பெரும்பாலானோர் பிறக்கவில்லை. சுதந்திரப் போர் நம்மில் எவருக்கும் முன்பே தொடங்கிவிட்டது. அதேபோல், நாம் விவாதிக்கும் அந்தத் தூரத்து எதிர்காலத்திலும் நாம் இருக்கப் போவதில்லை. நாம் வாழ்வதும் சாவதும் இந்த நிகழ்காலத்தில்தான். எனவே, நிகழ்காலத்தைச் சரியாகக் கட்டமைப்போம். இப்போதையைப் பற்றிப் பேசுவோம். இன்றைய காலத்தைப் பற்றிப் பேசுவோம்.

உங்களின் உன்னதமான அரசியலில் பங்கேற்க வேண்டும் என்ற இந்தப்பாதசாரியின் ஆர்வத்தை மன்னித்துவிடுங்கள். ஆனால் நினைவிருக்கட்டும், பாதசாரிகள்தான் தங்கள் பாதயாத்திரையால் வரலாற்றின் போக்கை மாற்றியிருக்கிறார்கள், சர்வாதிகாரிகளை வீழ்த்தியிருக்கிறார்கள். தண்டி யாத்திரை நினைவிருக்கிறதா? ஒரு மாபெரும் கருத்தியலான நமது பாப்புவை (காந்தி) நினைவுகூருங்கள்.

இப்போது நிகழ்காலத்தைக் கவனிப்போம். வரவிருக்கும் தேர்தல்களே எனது உடனடி கவலை. ஐயா, எனது அவதானிப்புகளைக் கூற அனுமதியுங்கள். நிகழ்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்து இதை எழுதினேன். இதை எழுத்துப்பிழை சரிபார்க்கப்பட்ட செத்தும் வாழ்வோர் சரிதை (அல்லது The Spell Checked Story of the living dead) என்று அழைக்கிறேன்.

ஐயா, நாங்கள் வாக்களிக்க விரும்புகிறோம், ஆனால் தேர்தல் ஆணையங்களோ எங்களது வாக்குரிமையைச் சரிபார்த்துக் கொண்டிருக்கின்றன. அவர்கள் பெயர்களில் உள்ள எழுத்துப்பிழைகளையும் முகவரிகளையும் சரிபார்க்கிறார்கள், அதுவும் தவறாக.

‘Spell’ என்ற ஆங்கில வார்த்தை பெயர்ச்சொல்லாகவும், வினைச்சொல்லாகவும் இருக்கிறது. அதை நீங்கள் எழுதலாம் (எழுத்துக்கூட்டுதல்) அல்லது ஏவலாம் (மந்திரக்கட்டு). நாங்கள் எங்கள் வாக்கைச் செலுத்த (Cast) விரும்புகிறோம். எழுத்துப்பிழைகள் மொழிகளுக்கு மட்டுமே சாபம். நவீன இலக்கியமும், இணையமும் கூட உள்ளடக்கத்திற்காக இவற்றை மன்னித்துவிடும். ஆனால் தேர்தல் ஆணையம் மன்னிப்பதில்லை. ‘EC’ என்றால் ‘English Coaches’ (ஆங்கில ஆசிரியர்கள்) என்று அர்த்தமல்ல.

ஏற்கனவே, பீகார் மாநிலம் “உயிருடன் இருக்கும் பிணங்கள்” நிறைந்த தேசமாகிவிட்டது. இந்த நோய் நாடு முழுவதும் பரவுவதை நாங்கள் விரும்பவில்லை. வங்காளத்தைச் சேர்ந்த எனது ‘தீதி’ (மம்தா பானர்ஜி) கூட இதையே தேர்தல் ஆணைய அலுவலகத்தில் முறையிட்டார். இதை பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கையில், தீதி உச்ச நீதி மன்றத்தில் வழக்காடிக்கொண்டிருக்கிறார். தேர்தல் ஆணையம் நிச்சயமாக இந்தப் பரவலுக்குத் துணை போகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் காகித அளவில் சுமார் 1 கோடி பேர் “உயிருடன் இருக்கும் பிணங்களாக” மாற்றப்படக்கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம். இந்த விபரீதத்தைத் தடுக்க நான் கடவுளிடம் வேண்ட முடியாது. எனது பகுத்தறிவு அந்தச் சிந்தனையை எப்போதோ நிராகரித்துவிட்டது.
அரசாங்கத்தில் இருப்பவர்களிடமும் நான் கெஞ்சப் போவதில்லை. காகிதத்தில் பிணங்களாக்கப்பட்டவர்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும் என்று நான் கோருகிறேன். அது அற்புதங்களால் நடக்காது. அற்புதத்திற்காகக் காத்திருக்க எங்களுக்கு நேரமில்லை. எங்கள் வாழ்நாள் குறுகியது. இப்போதே செயல்படுங்கள்.

மனக்கசப்புகள் நிறைந்த இந்த அவையின் மற்றொரு பாதியுடன் நாம் உடன்படாவிட்டால், இந்த மேலவைக்கு எந்த அர்த்தமும் இல்லை. குறைந்தபட்சம் “கருத்து வேறுபாடுகளைக் கொள்ளவாவது” நாம் உடன்பட வேண்டும். இன்று யாரும் எதற்கும் உடன்படுவதில்லை. அனைத்து ஒப்பந்தங்களும் மீறப்படுகின்றன.

மக்களின் திசையைச் சரிசெய்ய நீங்கள் உதவ மறுத்தால், நீங்கள் சாதிப்பது ஒன்றுமில்லை; அது சட்டவிரோதத் தேர்தல் வெற்றியால் பெற்ற அரைகுறை வாகையாகத்தான் இருக்கும். ஜனநாயகத்தில் யாரும் வாகை சூடி வெல்வதில்லை. இந்திய ஜனநாயகம் எனும் இந்த ஜெகந்நாத ரதம் உருண்டோடிக்கொண்டே இருக்கும். அது முன்னேறிச் செல்ல உங்களது ஜனநாயக சக்தியைக் கொடுத்து உதவுங்கள், இல்லையென்றால் இந்த ஜனநாயகக் குடியரசின் பாதையிலிருந்து விலகி நில்லுங்கள்.

ஜெகந்நாத ரத சக்ராலு வொஸதுன்னாயி… வொஸதுன்னாயி(ஜெகந்நாத ரத சக்கரம் வருகிறது.. வருகிறது..)

தெலுகு தெலிசின வாள்ளகு நேனு ஏம்செப்துன்னானோ தெலிசு போனி (நான் சொல்வது தெலுங்கு மக்களுக்குப் புரியும்)

ஐயா, இது தனிநபர்கள் மீதோ அல்லது அரசாங்கங்கள் மீதோ தொடுக்கப்படும் தாக்குதல் அல்ல. இந்த அவையில் எனது பதவிக்காலத்தில் அப்படிச் செய்வது வீண் வேலை. இது கருத்துகளுக்கு இடையிலான மோதல் மட்டுமே. ஜனநாயக ரதம் கருத்து வேறுபாடுகளை சமப்படுத்தி கடந்து செல்லும், ஆனால் ஒருபோதும் மக்கள் மீது ஏறிச் செல்லக்கூடாது. அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

இங்கு யாரும் இறவா வரமுடையோர் அல்ல. எந்த அரசாங்கமும் நிரந்தரத்தை இலக்காகக் கொள்ள முடியாது, கொள்ளவும் கூடாது. உலக வரலாற்றில் எந்த அரசாங்கமும் அதைச் சாதித்ததில்லை, இனியும் சாதிக்காது. இந்த அரசாங்கமும் அந்த உலகளாவிய எழுதப்படாத அரசியல் விதிகளுக்குள் வீழும்.

நண்பர்களே…

நமது செயல்பாடுகளை நமது குழந்தைகள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இளைய தலைமுறை (Generation Z) நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. நமது வளர்ந்து வரும், முற்போக்கான ஜனநாயகத்தோடு சேர்ந்து நாமும் வளர்வோம். அப்போதுதான் நாளை என்பது உண்மையாகவே நமதாகும். நாளை நமதே!

மதிப்பிற்குரிய ஐயா, உங்கள் அனுமதியுடன், இந்த அவையில் எனது மக்களுக்காகத் தமிழில் சில வார்த்தைகளைப் பேசுகிறேன். இது பக்கத்து அவையில் (மக்களவை) பேசப்பட்ட சில வார்த்தைகளால் எனக்கு ஏற்பட்ட ஆதங்கமும் கோபமும் மட்டுமே. உங்கள் அனுமதியுடன்…

ப்ரிய சகோதரி, பவதி பிக்‌ஷாந்தேகி என்று தெலுங்கில் இசை பாடி வந்த அந்த மாமனிதர் இசை மேதை தியாகராஜன். அவர் பிக்‌ஷா பாத்திரத்திலிருந்து எடுத்த சில்லறைகள் நவீன காலத்திற்கு உதவாது என்று தெரிந்தவர்கள் நீங்கள். நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான்.

அது காற்றோடு போய் பல ஆண்டுகளாகிவிட்டன. அதன் பிறகு உங்கள் பிச்சைப்பாத்திரம் உருமாற்றப்பட்டது. பிச்சைக் குவளை, பெரும் உண்டியலானது. அந்த உண்டியலையும் உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரைப் பார்த்து என்ன சொன்னீர்கள்?

தமிழ் பிச்சை எடுக்கக் கூட உதவாதா?
ஓரளவு உண்மைதான் தங்காய்…
ஒரு தெக்கத்தி அறிவுரை தங்காய்..
தமக்கென உங்கள் நிதியைத் திரட்ட ஆங்கிலத்தில் இந்தியில் பிச்சை எடுக்கலாமே
தமிழ் பிச்சை எடுக்க உதவாது.
திருடவும் உதவாது.
தமிழன் பிச்சை எடுக்கமாட்டான்.
அதுவும், உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான்.
தங்கச்சி!
ஓட்டையும் நாட்டையும்  இந்தத் தமிழன் கமல்ஹாசன் விற்கவே மாட்டான் .

உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.  உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய்ப் போடுகிறேன்.  கருணையுடன் நீங்களே ஏற்பீர்.

உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளுங்கள். பகுத்தறிந்த தமிழ்ச் சித்தன் கூற்று இது.

உம் வினை உம்மைச் சுடுக .
ஓட்டப்பம் உம் வீட்டைச் சுடுக.
என்றும் எங்கள் நாடு நீடூழி வாழும் .
வந்தீர்.. வென்றீர்.. செல்வீர்!
இது உலக நியதி. அரசியல்நீதியும் கூட.
வீழ்க வளமுடன்.
தமிழ் என்றும் வாழும் நலமுடன்.
வணக்கம் அவை வந்தடைந்த  தலைவர் கூட்டத்திற்கு…
சென்றும்
வருவேன்.
நாளை எமதே
உங்கள்
கமல் ஹாசன். ஜெய் ஹிந்த்.

Tags: கமல்ஹாசன்திமுகபிஜேபிமக்கள் நீதி மையம்
admin

admin

Related Posts

ரன்பீர் கபூர் – ஆலியா பட் நடித்த ‘லவ் & வார்’ ஜனவரி 2027ல் வெளியாகிறது!
News

ரன்பீர் கபூர் – ஆலியா பட் நடித்த ‘லவ் & வார்’ ஜனவரி 2027ல் வெளியாகிறது!

by admin
April 19, 2026
‘சிங்கா’ படத்தின் ‘டீசர்’  வெளியானது!!
News

‘சிங்கா’ படத்தின் ‘டீசர்’ வெளியானது!!

by admin
April 19, 2026
திருமணம் ஒரு  முற்றுகை இடப்பட்ட  கோட்டை ! கவிப்பேரரசு வைரமுத்து பரபரப்பு பேச்சு!!
News

திருமணம் ஒரு முற்றுகை இடப்பட்ட கோட்டை ! கவிப்பேரரசு வைரமுத்து பரபரப்பு பேச்சு!!

by admin
April 18, 2026
விஜய் தேவரகொண்டா –  இயக்குநர் சௌர்யுவ் இணையும் புதிய பட  போஸ்டர் !
News

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் புதிய பட போஸ்டர் !

by admin
April 18, 2026
விக்ரமின்  பிறந்தநாளில்  “சீயான் 63”  புதிய பட அறிவிப்பு!
News

விக்ரமின் பிறந்தநாளில் “சீயான் 63” புதிய பட அறிவிப்பு!

by admin
April 18, 2026

Recent News

‘சிங்கா’ படத்தின் ‘டீசர்’  வெளியானது!!

‘சிங்கா’ படத்தின் ‘டீசர்’ வெளியானது!!

April 19, 2026
திருமணம் ஒரு  முற்றுகை இடப்பட்ட  கோட்டை ! கவிப்பேரரசு வைரமுத்து பரபரப்பு பேச்சு!!

திருமணம் ஒரு முற்றுகை இடப்பட்ட கோட்டை ! கவிப்பேரரசு வைரமுத்து பரபரப்பு பேச்சு!!

April 18, 2026
விஜய் தேவரகொண்டா –  இயக்குநர் சௌர்யுவ் இணையும் புதிய பட  போஸ்டர் !

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் புதிய பட போஸ்டர் !

April 18, 2026
விக்ரமின்  பிறந்தநாளில்  “சீயான் 63”  புதிய பட அறிவிப்பு!

விக்ரமின் பிறந்தநாளில் “சீயான் 63” புதிய பட அறிவிப்பு!

April 18, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?