இன்றைய ஹாட் டாபிக்கே தமிழக வெற்றிக் க( ல) ழகத் தலைவரது குடும்ப வாழ்க்கைதான் !
அருவியாக பாய வேண்டிய வாழ்க்கை கூவமாக நாறிப்போய் இருக்கிறது.
அன்பின் வெளிப்பாடாக அழகிய ஆணும் பெண்ணுமாக இரு பிள்ளைகள் வெளிப்பட்டு இன்று வளர்ந்து ஆளாகி நிற்கிறார்கள்.
இந்த நிலையில் அரைக் கிழவனாகி விட்ட விஜய்க்கு “ஆசை நாயகியாக ஒரு நடிகை இருக்கிறாள் ,அழகியாக நானிருக்க வேறு எதற்கு கூத்தியாள் ,விலக்கி விடுங்கள்” என்று பன்முறை சொல்லியும் கேளாமல் என்னை உடல் ரீதியாகவும் உள்ள ரீதியாகவும் துன்புறுத்துகிறார் .எனக்கு விவாக ரத்து வேண்டும் “என்று வழக்கு தொடர்ந்து இருக்கிறார் மனைவி சங்கீதா . .
பரபரப்பான செய்தி பற்றி எரிந்த நிலையில் நடிகர் விஜய்யுடனான விவாகரத்து வழக்கு முடியும் வரை சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் தங்கியிருக்க விஜய் அனுமதிக்க வேண்டும் என்று தற்போது சங்கீதா கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். சரிபாதி பங்குள்ள வீட்டில் தங்குவதற்கு அனுமதிக்க கோரினால், வழக்கறிஞர் மூலமாக விஜய் தரப்பினர் மிரட்டுவதாக சங்கீதா குற்றம்சாட்டியுள்ளார். இது விஜய்யின் மொத்த இமேஜையும் நொறுக்கித் தள்ளி இருக்கிறது. மிரட்டுகிற மேட்டரில் ஆதவ் அர்ஜுனாவின் பெயர் அடிபடுகிறது. இப்படி மிரட்டுவதன் வழியாக விஜய்யுடனான நெருக்கத்தைஆதவ் வலுவாக்கிக்கொள்ளலாம் என நம்புகிறார் போலும்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனது கணவர் விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பது எனக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் கடந்த 2021 ஆண்டு செப்டம்பர் முதல் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரிஇடையேயான கால கட்டத்தில் எனது வழக்கறிஞர் மூலம் விஜய்யிடம் பேசினேன். அப்போது அந்த நடிகையுடனான தொடர்பை துண்டித்து கொள்வதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் என்னை ஒதுக்கி வைத்துவிட்டு நடிகையுடன் தொடர்பை தொடர்ந்தார். இது எனக்குமிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியது. திருமணத்துக்கு மீறிய இந்த உறவை நான் தட்டிக் கேட்டதால் பொருளாதார ரீதியாக எனக்கு நிறைய கட்டுப்பாடுகளை விஜய் விதித்தார். குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும், அவர்களின் மனமும் பாதிக்கப்படும் என்பதால் அவரிடமிருந்து விவாகரத்து கோருவதை தள்ளி வைத்தேன். ஆனால்,தொடர்ந்து அந்த நடிகையுடன் பல்வேறு பொது இடங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விஜய் சென்று வருகிறார். அந்த நடிகை என் கணவருடன் எடுத்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பரப்பி வருகிறார்.அந்த புகைப்படங்களுக்கு விஜய் எப்போதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. இந்த செயல் எனக்கும் என் குழந்தைகளுக்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்துக்கான நோட்டீஸ் அனுப்பியும், இரு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் விஜய் ஒத்துழைக்கவில்லை என்பதாக தன்னுடைய குற்றச்சாட்டில் பதிவு செய்திருந்தார்.
அந்த நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை சாடையாகவும் சொல்லவில்லை.
ஆனால் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப் போல ஒரு நிகழ்வு நடந்தேறியது. அது வலுக்கட்டாயமாக, வேண்டுமென்றே, திட்டமிட்டு நடந்தது போலவே இருக்கிறது. .
இரு தினங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் அகோரம் இல்லத்திருமண நிகழ்வுக்கு விஜய் நடிகை திரிஷாவை அழைத்து வந்திருந்தார்.
இருவரும் ஒரே காரில் வந்திறங்கினார்கள். இருவரும் சந்தனக் கலரில் பட்டாடை அணிந்திருந்தனர் ,கணவன் மனைவிபோல நடந்து கொண்டார்கள் .
இன்னொருவரின் கணவனுடன் ,அதுவும் விவாகரத்து சிக்கல் இருக்கிற நிலையில் வந்திருக்கிறோம் என்கிற குற்ற உணர்வு திரிஷாவுக்கு இருந்ததா என தெரியவில்லை.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ,நீயென்ன போட்டோ போடுவது நானே போடுகிறேன் என்பதைப் போல விஜய்யின் நடவடிக்கையும் அமைந்திருந்தது ,
ஆணாதிக்கம் ,திமிர். இப்படித்தான் நினைக்கத்தோன்றியது.
விவாகரத்து வழக்கு வரும் ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வர இருக்கிறது. கோர்ட்டில் விஜய் ஆஜராக வேண்டும் என்கிற கடமை இருக்கிறது.
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இரண்டாவது மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.
“எங்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, எங்கள் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும். பரஸ்பர சம்மதத்துடன் பிரிய மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால், தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளேன்.
பிரிட்டிஷ் குடியுரிமை கொண்ட எனக்கு இந்தியாவில் வேறு இருப்பிடம் இல்லை என்பதால், இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை, கடந்த 26 ஆண்டுகளாக விஜய்யுடன் வசித்து வந்த நீலாங்கரையில் உள்ள அவர் இல்லத்திலேயே தொடர்ந்து வசிப்பதற்கான உரிமையை வழங்க வேண்டும்.”
நீலாங்கரை இல்லத்தில் தங்குவதற்கு அனுமதி கேட்டபோது விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் மூலம் அனுமதி மறுக்கப்பட்டு, மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே சங்கீதா நீதிமன்றத்தை நாடியிருப்பதாக தெரிகிறது.












