தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் 150 திரைப்படங்களுக்கும் மேல் இயக்கிய தாசரி நாராயண ராவ் (வயது 75).இன்று உடல்நல குறைவு காரணமாக காலமானார்.
இரண்டு முறை தேசிய விருது, 9 நந்தி விருது, 4 பிலிம்பேர் விருதுகளையும் இவர் வென்றுள்ளார்.
கடந்த சில மாதங்களாக நுரையீரல் மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சையும் நடந்தது.
இந்நிலையில் நோயின் தாக்கம் தீவிரமானதால் சென்ற வாரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார், அவருக்கு மருத்துவர்கள் தீசிற சிகிச்சை அளித்து வந்தனர்.இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்..அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.