தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் முன்னிலையில் விஜய் ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்டார்.முதல்வர் விஜயை தொடர்ந்து என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி. அருண்ராஜ், கே.ஏ. செங்கோட்டையன், பி. வெங்கடரமணன், சி.டி.ஆர். நிர்மல்குமார், ஏ. ராஜமோகன், டி.கே. பிரபு, எஸ். கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.இந்நிகழ்வில் பலரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை திரிஷா. விஜய்யுடன் ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘லியோ’ உள்ளிட்ட ஐந்து வெற்றிப் படங்களில் நடித்த திரிஷா, நீல நிற பட்டுப் புடவையில் பாரம்பரிய உடையில் வந்திருந்தார். வைர மற்றும் மாணிக்க கற்கள் பதித்த ஆபரணங்களை அணிந்து தேவதை போல் காட்சியளித்தார்.
விஜய்யின் தந்தை மற்றும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா சந்திரசேகர் ஆகியோர் முன்வரிசையில் அமர்ந்து இருந்தனர்
முதல்வர் விஜய்க்கு முன்னாள் முதல்வர் முக ஸ் டாலின், பிரதமர் மோடி,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதும், விழா மேடையிலேயே முதல் கையெழுத்தாக, தமிழ்நாட்டில் இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் உத்தரவு அமைந்தது.இதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்புக்கு மாவட்டந்தோறும் சிறப்புப் படை, பெண்கள் பாதுகாப்பு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆகிய உத்தரவுகளையும் விஜய் பிறப்பித்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று (மே 10, 2026) தனது திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார்.
இதையடுத்து முதலமைச்சர் விஜய் இப்பதவியை முறைப்படி ராஜினாமா செய்துள்ளதால், இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும். அடுத்த ஆறு மாத காலத்திற்குள் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளதால் திருச்சி அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.












