
ஜூன் 18 அன்று ஜனநாயகன் படம் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு ஒரு பக்கம்,
இன்னொரு பக்கத்தில் முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் இருபத்தி இரண்டு என்பதால் அதற்கு முந்தைய வியாழக்கிழமை ஜூன் 18- ல் திரையிடப்படலாம் என்கிற இனிப்பான தகவலும் ஓடிக்கொண்டிருந்தது. .
ஆனால் விதி வலியது என்பது போல இனி எப்போதுமே அந்தப்படம் வெளிவராது என்கிற குண்டை சிலர் வீசுகிறார்கள்.
என்னடா மதுரைக்கு வந்த சோதனை ?
தணிக்கை வாரியம் சான்றிதழ் கொடுக்கவில்லை..அவர்கள் சொன்ன திருத்தங்களை செய்து கொடுத்தும் இன்று வரை சான்றிதழ் கிடைக்கவில்லை.
ஜனநாயகனின் இயக்குநரான எச் வினோத் எவரும் எதிர்பாராத அணுகுண்டினை வீசி இருக்கிறார்.
“காரணங்களை சொன்னால் அதை வெளியிடும் தைரியம் மீடியாவுக்கு இருக்கிறதா?” என்கிற ஆண்மை சோதனைக்கு அழைப்பு விடுக்கிறார்.
தலை சுற்றுகிறது.
ஜனநாயகன் கதாநாயகன் ஜோசப் விஜய் முதல்வராகிவிட்டதால் தணிக்கை வாரியம் தாமதம் செய்யாது,, சான்றிதழ் கிடைத்து விடும் என்கிற நம்பிக்கை சிலருக்கு இருந்தது.தற்போது அந்த நம்பிக்கையிலும் மண் விழுந்து விட்டது.
ஏனென்றால் விஜய்யை சந்தித்து விட்டு திரும்பிய விஜய் ஆண்டனி தன்னுடைய நூறு சாமிகள் படம் ஜூன் 19 -ல் வெளிவரும் என்பதாக அறிவித்திருக்கிறார்.
இதனால்,ஜூன் 18 அன்று ஜனநாயகன் படம் வெளியாகாது என்பது உறுதியான செய்தியாகிவிட்டது!.
ஜனநாயகனை நம்பி வாங்கிய பணத்துக்கு வட்டி கட்ட முடியாமல் விநியோகஸ்தர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.சிக்கல் சிக்கல் என நிலைமை ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
படத்தின் நாயகன் ச.ஜோசப் விஜய் நேரடியாக தலையிட முடியாது .என்ன பண்ணுவது .வேற வழி இல்லை.விநியோகஸ்தர்களிடம் வாங்கிய பணத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுத்துவிடுவோம் என்கிற மனநிலைக்கு தயாரிப்பு நிறுவனம் வந்து விட்டதாக சொல்லுகிறார்கள்.
இதை செய்ய சொன்னதே சாட்சாத் விஜய்தான் என்கிறார்கள்.உண்மையாக இருக்குமா ?
தணிக்கை வாரியத்தை தொடர்ச்சியாக அணுகியும் பதிலே இல்லை என்ற பிறகு வேறு என்னதான் செய்ய முடியும்?
இதனால் ஜனநாயகன் இனி வரவே வராது என்கிற முடிவுக்கு விநியோகஸ்தர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
வானளாவிய அதிகாரத்தை கையில் வைத்திருக்கிற ஒன்றிய அரசு தணிக்கை வாரியம் வழியாக ஜனநாயகத்துக்கு முடிவு கட்டிவிட்டதாக சொல்லலாம். வேறென்ன சார் சொல்லுவது?
.












