சாய் பாபா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய தமிழ் திரைப்படம் “இருள் சூழும் இரவினிலே”. கமர்ஷியல் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை சிவராம் இயக்குவதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் திகில்,வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இப்படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
“சிறந்த திரைக்கதையால் வெற்றி பெற்ற திரைப்படங்களின் வரிசையில் ‘இருள் சூழும் இரவினிலே’யும் இடம்பிடிக்கும்” என்ற நம்பிக்கையை இயக்குநர் சிவராம் வெளிப்படுத்தியுள்ளார்.
இப்படத்தின் டீசர் Moviebuff யூடியூப் சேனலில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. விரைவில் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளது.
படத்தின் சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் வயலன்ட் வேலு மேற்பார்வையில் படமாக்கியுள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில் இது அவரது 100 வது திரைப்படம் என்பதும் சிறப்பம்சமாகும். இசை விஷ்னுவர்தன்,
: கேமராமேன் அருண் சுஷில்.
பழனியைச் சேர்ந்த எம். பாலா இப்படத்தை தயாரித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.












