கடந்த 2006ஆம் ஆண்டு,செப்டம்பர் மாதம் 11ம் தேதியன்று திருமண வாழ்வில் இணைந்த நடிகர் சூர்யா-ஜோதிகா காதல் ஜோடி தங்களது 20 ஆண்டுகால திருமண வாழ்வை நிறைவு செய்துள்ளதையடுத்து தங்களது 20வது திருமணநாளை வித்தியாசமாக கொண்டாடியிருக்கிறார்கள். அதாவது சூர்யா, ஜோதிகாவுக்கு கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம் நடந்திருக்கிறது. திருமண உறுதிமொழிகளை புதுப்பிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அந்த வீடியோவில், ‘ஜோதிகா ஸ்டிராப்லெஸ் வெள்ளை நிற கவுனில் அழகாக புதுமணபெண் போல காட்சியளிக்கிறார். . சூர்யாவோ வெள்ளை நிற கோட்டில் ரொம்ப ஸ்டைலிஷாக உள்ளார்.. இந்நிகழ்வில் சூர்யாவின் உடன்பிறப்பு, கார்த்தியும் கலந்து கொண்டுள்ளார்.
மேலும் சூர்யாவுடன் மகள் தியாவும், அம்மாவுடன் மகன் தேவும் நடந்து வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது இணையத்தில் வைரலாகி வரும் இந்த திருமண வீடியோவை பார்த்து பலரும் சூர்யா ஜோதிகா ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்த வீடியோவை தனது இன்ஸ் டாவில் வெளியிட்டுள்ள
நடிகை ஜோதிகா, தங்கள் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயம் தொடங்கியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும்,தங்கள் திருமண உறுதிமொழிகளை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் ஒரு நிகழ்ச்சியாக இது அமைந்ததாகவும் குறிப்பிட்டுள் ள அவர்,‘காதல் மற்றும் போராட்டங்கள்’ நிறைந்த பயணத்தில் விட்டுக்கொடுத்தல்கள், புரிதல், தியாகங்கள் மற்றும் சுயநலமற்ற அன்பு ஆகியவற்றைக் கொண்டாடும் நிகழ்ச்சியாக இது அமைந்ததாகவும், மேலும், பல்வேறு உறுதிமொழிகளையும் கூறியுள்ள ஜோதிகா, மகிழ்ச்சியாக இருப்பேன் எனவும் குறை கூற மாட்டேன்’ எனவும் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram












