இந்திய பாரம்பரிய இசை உலகின் முடிசூடா ராணியாகத் திகழ்ந்த பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் அசாத்திய வாழ்வியலை மையமாகக் கொண்ட பிரம்மாண்டத் சுயசரிதை (Biopic) திரைப்படம், அவரது 110-வது பிறந்தநாளை முன்னிட்டு தற்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலத்தின் ஓட்டத்தில் சில குரல்கள் தற்காலிகமாகக் கேட்கக் கூடும், சில குரல்கள் மக்களின் நினைவுகளில் நிலைத்து நிற்கக் கூடும்; ஆனால் ஒரு தேசத்தின் ஒட்டுமொத்த ஆன்மாவோடும், கலாச்சாரத்தோடும் இரண்டறக் கலந்துவிடும் குரல்கள் வரலாற்றில் வெகு சிலதாகவே அமையும். அத்தகைய மிக மகத்தான இசைப் பேரியக்கமாகத் திகழ்ந்தவர் பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மா ஆவார்.
மொழி, புவியியல் எல்லைகள் மற்றும் தலைமுறைகள் ஆகிய அனைத்து வரம்புகளையும் தாண்டி உலக அரங்கில் பயணித்த இவரது தெய்வீக இசை, கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் பக்தியையும் மெய்ஞான உணர்வையும் விதைத்ததோடு, இந்தியாவின் தொன்மையான கலாச்சார அடையாளத்தின் அழியாததொரு அங்கமாக மாறியது. அவர் மறைந்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும், அவரது வசீகரிக்கும் குரலும் இசையும் இன்றும் இந்திய இல்லங்கள், ஆன்மீகத் தலங்கள் மற்றும் புகழ்பெற்ற இசை அரங்குகள் எனத் தேசத்தின் நாலாபுறமும் தினசரி ஒலித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய அசாத்திய ஆளுமையின் வாழ்க்கை வரலாற்றை உலகத் தரத்திலான திரைப்படமாக மாற்றும் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இந்திய பாரம்பரிய இசை மற்றும் கர்நாடக சங்கீத வரலாற்றுடன் மிகவும் ஆழமான வரலாற்றுத் தொடர்புடைய சென்னை தி மியூசிக் அகாடமியில் (The Music Academy, Chennai) வைத்து விமரிசையாக வெளியிடப்பட்டுள்ளது இவ்விழாவிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.
இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் கலை ஆளுமையின் வாழ்க்கை வரலாற்றைத் திரையில் பதிவு செய்வது என்பது சாதாரணமானதொரு முயற்சியல்ல என்பதால், அவரது வாழ்வியலை எவ்விதக் கற்பனை கலப்புமன்றி அதன் உண்மைத் தன்மையுடனும், உரிய மரியாதையுடனும் ஆவணப்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் பல ஆண்டுகளாகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இதற்காத் தேவையான சட்டப்பூர்வ உரிமைகள், அதிகாரப்பூர்வ அனுமதிகள், ஆதாரங்கள் மற்றும் அவரது குடும்பத்தினருடனான நெருங்கிய தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்டப் பூர்வாங்கப் பணிகள் கடந்த சில வருடங்களாக மிக நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டுத் தற்பொழுது ஒரு முக்கியமான இறுதி வடிவத்தை எட்டியுள்ளன.
இந்த நீண்ட நெடிய உழைப்பின் பயனாக, எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் காலத்தால் அழியாத அசாத்திய இசைப் பயணம் இனி சினிமா எனும் உலகளாவிய ஊடக மொழியின் வழியாக உலகெங்கும் உள்ள உலகத் தரத்திலான ரசிகர்களைச் சென்றடைய இருக்கிறது.
இத்திரைப்படத்தின் மற்றொரு மிக முக்கியமான சிறப்பம்சமாக, கடந்த காலத்தின் உன்னதமான இசை மரபை இன்றைய நவீன தலைமுறையுடன் மிகச் சரியாக இணைக்கும் ஒரு உன்னத முயற்சி அமையப் பெற்றுள்ளது. அந்த வகையில், தற்போதைய சமகாலத் திரையுலகின் முன்னணி இசை ஆளுமைகளில் ஒருவரான அனிருத் ரவிச்சந்தர் இத்திரைப்படத்திற்கு இசையமைக்க அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் . இன்றைய இளைஞர்களைத் தனது துள்ளலான இசையால் உடனடியாக ஈர்க்கும் அனிருத்தின் பங்களிப்பு, எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் காலத்தால் அழியாத இசை உலகத்தையும், இன்றைய புதிய தலைமுறை ரசிகர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு மிக முக்கியமான இசைப் பாலமாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இந்த இந்திய இசை வரலாற்றின் மாபெரும் காவியத் திரைப்படத்தில், பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் முதன்மைக் கதாபாத்திரத்தில் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தற்போதைய புதிய தலைமுறையின் மிகவும் பிரபலமான மற்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனாவிற்கு, கலை மற்றும் சினிமாவையும் தாண்டி இந்திய மக்களின் நெஞ்சங்களில் காலம் கடந்தும் நீங்கா இடம்பெற்றுள்ள ஒரு மாபெரும் உன்னத ஆளுமையைத் திரையில் அச்சு அசலாகப் பிரதிபலிக்கும் மிக உயரிய பொறுப்பு தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது. தனது அர்ப்பணிப்புடன் கூடிய தனித்துவமான நடிப்புத் திறனின் மூலம், ஒட்டுமொத்த உலகமும் வியந்து போற்றிய அந்தப் புகழ்பெற்ற தெய்வீகக் குரலுக்குப் பின்னால் வாழ்ந்த ஒரு சராசரிப் பெண்ணின் அசல் உணர்வுகள், அவரது ஆசைகள், கடந்து வந்த கடினமான போராட்டங்கள், மனவலிமை மற்றும் அவரது ஆழமான ஆன்மிகப் பயணம் ஆகிய அரிய வாழ்வியல் பக்கங்களை இன்றைய நவீன புதிய தலைமுறைக்கு மிகவும் நெருக்கமாகவும், ஆவணப் பூர்வமாகவும் கொண்டு சேர்க்கும் ஒரு அரிய முயற்சி இத்திரைப்படத்தின் மூலம் மிக நேர்த்தியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திரைப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது.












