
“வேணாம் அரசியல் “என முடிவெடுத்த ரஜினிகாந்த் தற்போது தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்.
உடல் நலத்தைக் காரணம் காட்டி “ரிட்டையர் ஆகிவிடுவார்”என ஜாதகம் கணித்தவரெல்லாம் தற்போது வாயடைத்து ஊமைகளாகிவிட்டார்கள்.
ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
இப் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. இப்படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த்,ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தையடுத்து மீண்டும் அண்ணாத்த படத்தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது ரஜினிகாந்த் இப் படத்தை தயாரிக்க லைகா நிறுவனத்திற்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.O மற்றும் தர்பார் ஆகிய படங்கள் அந்நிறுவனத்திற்கு பெரிதாக கை கொடுக்காத நிலையில்,இப்படங்களின் மூலம் ஏற்பட்ட இழப்புகளை சரிகட்ட தன்னுடைய அடுத்த படத்தை லைகா நிறுவனத்திற்கே கொடுக்க ரஜினி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












