மதுரையில் அரசு விழா ஒன்றிற்காகப் பள்ளம் தோண்டும் போது, இரண்டு பெண்களின் சிதைந்த எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படுகின்றன. அரசியல் மற்றும் ஊடக நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்த வழக்கின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் பொறுப்பு சப்-இன்ஸ்பெக்டர் மூசா ராசாவிடம் (சசிகுமார்) ஒப்படைக்கப்படுகிறது. மேலதிகாரிகள் இந்த வழக்கை அவசரமாக மூடி மறைக்க முயன்றாலும், சசிகுமார் தனது தனித்துவமான புலனாய்வு மூலம் கொலையுண்டவர்கள் யார், அதன் பின்னணியில் இருக்கும் உண்மையான குற்றவாளி யார் என்பதைப் பல அதிரடி திருப்பங்களுடன் கண்டுபிடிப்பதே கதை.
சசிகுமார் முதல்முறையாகக் காவல் துறை அதிகாரியாகத் தோன்றி, எவ்வித மிகைப்படுத்தலும் இன்றி மிகவும் கச்சிதமான மற்றும் அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அனகா & யஷ்வந்த் எஸ்பி-யாக வரும் அனகா கம்பீரமான நடிப்பையும், ‘முடக்கத்தான் மணி’யாக வரும் புதுமுக நடிகர் யஷ்வந்த் அசல் மதுரை இளைஞனின் வாழ்வியலையும் தத்ரூபமாகக் கடத்தியுள்ளனர்.
‘யார் கொலையாளி?’ என்ற வழக்கமான பாணியைத் தவிர்த்து, ‘தண்டிக்கப்பட்டவர் நிரபராதி’ என்பதை நிரூபிக்கும் வகையில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் திரைக்கதையை விறுவிறுப்பாக அமைத்துள்ளார். சைமன் கே. கிங்கின் பின்னணி இசை ஒவ்வொரு எபிசோடின் விறுவிறுப்பையும் கூட்டுகிறது. சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவு தேவையற்ற இருட்டைக் காட்டாமல் இயற்கையான வெளிச்சத்தில் ரசிக்க வைக்கிறது.
ரத்த ஆறு, ஆபாசம் அல்லது நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரமான காட்சிகள் எதுவும் இல்லாத ஒரு தூய்மையான கிரைம் த்ரில்லர்.பார்வையாளர்களின் யூகங்களை உடைக்கும் புத்திசாலித்தனமான திருப்பங்கள்.ஜல்லிக்கட்டு கலாச்சாரம், குடும்ப உறவுகள் மற்றும் சமகால சமூகப் பிரச்சினையை நேர்த்தியாகக் கையாண்ட விதம். ஆகியன பலமாக இருக்கிறது.
‘வதந்தி – சீசன் 2’ என்பது குடும்பத்தில் இருக்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒன்றாக அமர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு நேர்த்தியான, சுவாரசியமான இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் தொடர்.












