முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் புதிய படம், ‘சிக்மா’. , லைகா தயாரித்துள்ள இப்படத்தின் நாயகனாக சந்தீப் கிஷன் நடிக்க,பரியா அப்துல்லா நாயகியாகவும் நடித்துள்ளனர்.இவர்களுடன் ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜபே, மகலட்சுமி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ், கிரண் கொண்டா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவான இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழா மேடையில் பேசிய நடிகர் சூரி, “ஜேசன் சஞ்சய் எனக்கு சொந்தத் தம்பி மாதிரி.விஜய் அண்ணனைப் பார்த்த அதே அமைதியும், அடக்கமும், திறமையும் சஞ்சய்யிடமும் அப்படியே இருக்கிறது.சின்ன வயதிலிருந்தே அவரைப் பார்த்து வருகிறேன்.இன்றைக்கு ஒரு பிரமாண்டமான படத்தை இயக்கி, இந்த மேடையில் கம்பீரமாக நிற்கும்போது ஒரு அண்ணனாக எனக்கு மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. இந்தப்படம்,”ஒரு முதல் பட இயக்குநரின் படம் போல இது தெரியவே இல்லை.சர்வதேசத் தரத்தில் ஆக்ஷன் காட்சிகளையும், கதைக்களத்தையும் செதுக்கியுள்ளார்.சந்தீப் கிஷன் மற்றும் தமன் இசை படத்திற்குப் பெரிய பலம்.ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத சிறந்த இயக்குநராக வலம் வருவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.”என நெகிழ்ச்சியுடன் பேசினார்
இந்நிகழ்வில் ஜேசன் சஞ்சய் பேசுகையில்,” “என் அம்மாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இன்று முதலமைச்சராக இருக்கும் என் தந்தைக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். மேலும், என் அன்புச் சகோதரி திவ்யாவுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்,” என்றவர் மேலும், தான் மிகவும் நம்பக் கூடிய நபர்களில் ஒருவர் என நடிகர் சஞ்சீவைப் பற்றியும் குறிப்பிட்டவர்,கல்லூரிப் படிப்பிற்கு பிறகு இயக்குநராகும் எண்ணத்துடன் அவரை அணுகியதையும், உடனடியாக அதற்கு அவர் ஆதரவளித்தாகவும் நினைவு கூர்ந்தார். மேலும் இப்படத்தின் டிரெய்லரைப் பார்த்து பாராட்டிய இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி குறித்து கூறுகையில், “அவர் இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர். படப்பிடிப்பின் போது அவர் எங்களுக்கு நிறைய நேரம் ஒதுக்கினார். எங்கள் டிரெய்லரைப் பார்த்துவிட்டு, எங்களிடம் பல கேள்விகளைக் கேட்டார். எங்கள் படத்தை தெலுங்கில் விளம்பரப்படுத்தவும் அவர் உதவினார்,” என் றார். படத்தின் முதல் சிங்கிளை வெளியிட்டதற்காக துல்கர் சல்மானுக்கும், தனக்கு உத்வேகம் அளித்த நடிகர் சூரிக்கும் நன்றி கூறி பாராட்டியவர், எதிர்காலத்தில் சூரியுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார்.
சூதாட்டம், போதைப்பொருள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.












