கேப்பிடல் பிலிம் வொர்க்ஸ் எஸ்.பி. சரண் தயாரிப்பில் மதுமிதா இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம் ‘மூணே மூணு வார்த்தை’. இப்படத்தின் நாயகி டெல்லியை சேர்ந்த அதிதி செங்கப்பா ,தன முதல் பட அனுபவத்தை பற்றி கூறுகையில்,
“ இப்படத்தில் நடித்தது எனக்கு ஒரு புது வித அனுபவம்.தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே சமயத்தில் நான் முதன்முறையாக நடிக்கிறேன். எனது கதாப்பாத்திரத்தின் பெயர் அஞ்சலி, ஒரு தைரியமான , தெளிவான பெண்.
“இரு மொழி படம் என்பதால் நடிப்பதற்கு பெரும் சவாலாய் அமைந்தது. இப்படம் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது. பெரும்பாலான இடங்களில் தமிழ் வசனத்திற்கு பதிலாக தெலுங்கு வசனங்கள் பேசி சொதப்பினேன். இதுவாவது பரவாயில்லை, தமிழில் ஒரு கதாநாயகன் தெலுங்கில் இன்னொருவர் . ஒரு சில நிமிடங்களில் இருவருடன் ஒரே முக பாவத்துடன் காதல் செய்வது என்பது மிகவும் கடினமாக இருந்தது. என் தோழிகள் கூட இதை வைத்து என்னை ரொம்ப ஓட்டுவாங்க. காதல் காட்சிகளில் ஒருவருடனும் சண்டை போடும் காட்சிகளில் இன்னொருவரிடமும் ஈடுபாடுடன் நடித்தேன். நடிப்பு தான், தப்பா நினைச்சுகாதீங்க . எனக்கு தமிழ் பேச வராது ஆனா, “எனக்கு ரொம்ப பசிக்குது” என்ற மூணு வார்த்தையை நான் படப்பிடிப்பில் அதிகம் பயன்படுத்துவதுண்டு. என்கிறார் அதிதி செங்கப்பா.