இசையமைப்பாளர்ஹி ப்ஹாப் தமிழா ஆதி ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் கதாநாயகனாகவும் களமிறங்கினார் . மீசையை முறுக்கு அப்படத்துக்குப் பிறகு மீண்டும்சு ந்தர்.சி தயாரிக்கும் அடுத்த படத்திலும் ஆதி ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில், ஆதி இன்று காலை தனது நீண்ட கால தோழி லக்ஷிதாவை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியது. அது தொடர்பான புகைப்படங்களும் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து விசாரித்த போது, இருவருக்கும் இன்று காலை திருப்பதியில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது உண்மை தான்.விரைவில் திருமண நாள் அறிவிக்கப்படும் என்று கூறினர். மேலும் இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆதி, அவர், இனிமேல் தான் சிங்கிள் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் உங்களின் வாழ்த்துகள், எங்களுக்கு நிச்சயம் தேவை உங்கள் வாழ்த்துக்களோடு எங்கள் பயணம் இனிதே ஆரம்பமாகியுள்ளது என்றும் குறிப்பிட்டுளார்.