Sunday, August 14, 2022
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ஆதரவற்றோர், விதவைகள், முதியோர்களுக்கு உதவி தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும் – விஷால்

admin by admin
December 28, 2017
in News
427 5
0
598
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

சூர்யா ,ஜோதிகாவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு !

“விருதுகள் வேணும்னா மோடிக்கு ஜே போடணுமா?” பார்த்தீபனின் பதிவு!

“பாரதிராஜாவுக்கு அடுத்து முத்தையாதான் கிராமிய காதலன்!”விருமன் சாப்பாடு சூப்பர்!!!

ஆதரவற்றோர், விதவைகள், முதியோர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த உதவி தொகையே உடனடியாக வழங்கப்பட வேண்டும் – விஷால் கூறுகிறார்.
வறுமை ஒழிப்பு திட்டத்தில் ஆதரவற்றோர், விதவைகள், முதியோர்களுக்கு வழங்கும் உதவித்தொகை திட்டம் முக்கிய இடம் பெறுகிறது. புரட்சித்தலைவி அமரர் ஜெயலலிதா அவர்கள் முதியோர் ஓய்வூதிய திட்டத்துக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தார். 2011 இல் அவர் ஆட்சியமைத்தபோது 500 ரூபாயாக இருந்த இந்த உதவித்தொகையை ரூபாய் ஆயிரமாக உயர்த்தினார். 2016 இல் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு முழுக்க சுமார் 21 லட்சம் முதியோருக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுவதை உறுதி செய்தார். ரூபாய் 4 ஆயிரத்து 600 கோடி இந்த திட்டத்துக்காக மட்டும் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகு இந்த திட்டம் சரியாக செயல்படுத்தப்படாததால் தமிழ்நாடு முழுக்கவே முதியோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.   விதவைகளுக்கு வழங்கப்பட்ட உதவி தொகை கூட முறையாக கிடைக்கவில்லை. பிள்ளைகள் ஆதரவு இல்லாமல் தனியாக வசிக்கும் லட்சக்கணக்கான ஆண், பெண் முதியோர்களுக்கு மாதா மாதம் வழங்கப்பட்ட உதவி தொகை கடந்த சில மாதங்களாக கிடைக்கவில்லை. இதனால் வயதான காலத்தில் உதவி தொகை கேட்டு தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகிறார்கள்.
     குறிப்பாக ஆர்கே நகர் தொகுதியில் நேற்று முதியோர்கள் தங்களுக்கு பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருக்கும் உதவித்தொகையை கேட்டு சாலை மறியலும் உண்ணாவிரத போராட்டமும் நடத்தியிருக்கிறார்கள். ஆர்கே நகர் தொகுதியில் சுமார் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட முதியோர்கள் உதவித்தொகை பெறுவதாக புள்ளி விவரம் சொல்கிறது. அவர்களுக்கு 5 முதல் 8 மாதங்கள் வரை உதவித்தொகை நிலுவையில் இருக்கிறது. அஞ்சல்துறை மூலமாக வழங்கப்பட்டு வந்த வரை இந்த பிரச்னை இல்லை. புரட்சித்தலைவி அவர்கள் தான் இந்த திட்டத்தின் முறைகேடுகளை தடுக்க வங்கி மூலம் வழங்க உத்தரவிட்டார். ஆனால் வங்கி மூலம் வழங்கத் தொடங்கியதில் இருந்தே பயனாளிகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வாரத்துக்கு ஒருநாள் வினியோகம், ஒரு நாளைக்கு இத்தனை பேர் தான் வர வேண்டும், மாதாமாதம் புதுப்பிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளால் பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதில் தேக்கம் ஏற்படுகிறது. நிதி பற்றாக்குறையும் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
    பெண்களுக்கும் முதியோருக்கும் உறுதுணையாக இருந்தவர் புரட்சித்தலைவி அவர்கள். இனியும் நிலுவையில் வைக்காமல் தமிழக அரசு செவிசாய்த்து தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்றோர், விதவைகள், முதியோர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த உதவி தொகையே உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
ஆர்கே நகர் சட்டப்பேரவை தொகுதியில் உறுப்பினராக பதவியேற்றிருக்கும் உயர்திரு. தினகரன் அவர்கள் அந்த தொகுதியில் இந்த உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் சரியாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.
admin

admin

Related Posts

சூர்யா ,ஜோதிகாவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு !
News

சூர்யா ,ஜோதிகாவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு !

by admin
August 12, 2022
“விருதுகள் வேணும்னா மோடிக்கு ஜே போடணுமா?” பார்த்தீபனின் பதிவு!
News

“விருதுகள் வேணும்னா மோடிக்கு ஜே போடணுமா?” பார்த்தீபனின் பதிவு!

by admin
August 10, 2022
“பாரதிராஜாவுக்கு அடுத்து முத்தையாதான் கிராமிய காதலன்!”விருமன் சாப்பாடு சூப்பர்!!!
News

“பாரதிராஜாவுக்கு அடுத்து முத்தையாதான் கிராமிய காதலன்!”விருமன் சாப்பாடு சூப்பர்!!!

by admin
August 9, 2022
“தமிழ்ப்படங்களே போதும் என நினைத்தோம்.ஆமிர்கானின் இந்திப்படம் எப்படி வந்தது?” உதயநிதி ஸ்டாலின் ரகசியம் உடைத்தார்.!
News

“தமிழ்ப்படங்களே போதும் என நினைத்தோம்.ஆமிர்கானின் இந்திப்படம் எப்படி வந்தது?” உதயநிதி ஸ்டாலின் ரகசியம் உடைத்தார்.!

by admin
August 8, 2022
“இந்தி திணிப்பையே எதிர்க்கிறோம்” உதயநிதி ஸ்டாலின் விளக்கம்.!
News

“இந்தி திணிப்பையே எதிர்க்கிறோம்” உதயநிதி ஸ்டாலின் விளக்கம்.!

by admin
August 7, 2022

Recent News

“விருதுகள் வேணும்னா மோடிக்கு ஜே போடணுமா?” பார்த்தீபனின் பதிவு!

“விருதுகள் வேணும்னா மோடிக்கு ஜே போடணுமா?” பார்த்தீபனின் பதிவு!

August 10, 2022
“பாரதிராஜாவுக்கு அடுத்து முத்தையாதான் கிராமிய காதலன்!”விருமன் சாப்பாடு சூப்பர்!!!

“பாரதிராஜாவுக்கு அடுத்து முத்தையாதான் கிராமிய காதலன்!”விருமன் சாப்பாடு சூப்பர்!!!

August 9, 2022
“தமிழ்ப்படங்களே போதும் என நினைத்தோம்.ஆமிர்கானின் இந்திப்படம் எப்படி வந்தது?” உதயநிதி ஸ்டாலின் ரகசியம் உடைத்தார்.!

“தமிழ்ப்படங்களே போதும் என நினைத்தோம்.ஆமிர்கானின் இந்திப்படம் எப்படி வந்தது?” உதயநிதி ஸ்டாலின் ரகசியம் உடைத்தார்.!

August 8, 2022
“இந்தி திணிப்பையே எதிர்க்கிறோம்” உதயநிதி ஸ்டாலின் விளக்கம்.!

“இந்தி திணிப்பையே எதிர்க்கிறோம்” உதயநிதி ஸ்டாலின் விளக்கம்.!

August 7, 2022

Actress

Sanchita Shetty Latest Stills

Sanchita Shetty Latest Stills

June 13, 2021
கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

April 5, 2021
Sanchita Shetty New Photo Shoot

Sanchita Shetty New Photo Shoot

December 16, 2020
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

December 9, 2020
Raashi Khanna New Photo Shoot

Raashi Khanna New Photo Shoot

December 7, 2020

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?