இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது,
‘உங்க எல்லோரயும் இங்கே ஒரே இடத்துல பார்க்கிறது சந்தோஷமா இருக்கு. ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை உலகமெல்லாம் கொண்டு போய் சேர்த்தது நீங்கதான். உங்களுக்கு நன்றி சொல்லத்தான் இங்கே கூப்பிட்டேன். இது ப்ரஸ் மீட் கிடையாது. சீக்கிரமே உங்க எல்லோரையும் ப்ரஸ் மீட்டுக்கும் கூப்பிடுறேன். நாம இனி அடிக்கடி சந்திச்சுதானே ஆகணும். நானும்எ ஒரு காலத்துல பத்திரிகை காரனா இருந்தவன் தான் ,எ னக்கும் பத்திரிகைக்கும் சில தொடர்புகள் இருக்கு. நான் பத்தாம் வகுப்பு பெயில் ஆகிட்டு வீட்டுல இருந்த சமயத்துல என் நண்பன் ஒருத்தன் கன்னட பத்திரிகை ஒன்றில் வேலை பார்த்துட்டு இருந்தான்.
அவன் தான் என்னை அந்த கன்னட பத்திரிகையில் புரூஃப் ரீடராக வேலைக்கு சேர்த்துவிட்டான். மூணு மாசம் அங்கே வேலை பார்த்தேன். அதுக்குப் பிறகு வாழ்க்கை மாறிடுச்சு. 1979-ம் வருஷம்னு நினைக்கிறேன்… என்னோட முதல் பேட்டி பொம்மை பத்திரிகையில் வந்துச்சு.இப்போ நான் அரசியல் கட்சி தொடங்கப் போறதாக அறிவிச்சு இருக்கேன். அதுக்கு உங்க ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் வேணும். சுதந்திரப் போராட்டம் போல இப்போ இன்னொரு புரட்சிக்கு நான் தயாராகப் போறேன். சுதந்திரப் போராட்டத்துல தமிழ்நாட்டின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்திருக்கு. அதைப் போல இன்னொரு புரட்சி, போராட்டம் இப்போ நடக்கப் போகுது. அதுக்கு தமிழ்நாடு எனக்கு நிச்சயம் ஒத்துழைப்பு கொடுக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. தமிழ்நாட்டில் இப்போ ஒரு மாற்றம் தேவை என்பது உங்களுக்கும் தெரியும். பார்ப்போம்… இன்னும் போகப் போக நிறைய பேசலாம்!”