நடிகர் கமல்ஹாசன் பிப்.,21ம் தேதி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் தனது அரசியல் பயணத்தை துவக்கினார். தனது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயர் வைத்து கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் தனது கட்சிக்கு 10 பேர் கொண்ட மாநில பேச்சாளர் குழுவை கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இக்குழுவில் இடம் பெற்ற 10 பேர்:
1,ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி மவுரியா, 2,எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார்,3, முரளி அப்பாஸ், 4,கமிலா நாசர், 5,பட்டிமன்ற பேச்சாளர் ஞான சம்பந்தன்,6, ரங்கராஜன், 7,ஆர்.ஆர்.சிவராமன்,8, சவுரி ராஜன், 9,நடிகை ஸ்ரீபிரியா மற்றும் 10,கவிஞர் சினேகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.