“தப்பித்து வந்தாளம்மா,அவள் தடுமாறி நின்றாளம்மா” என்கிற நிலையாகி விட்டது நடிகை ரகுல் பிரீத் சிங்கின் கதை.! “தெலுங்கு பட வுலகத்தில் நடிகைகளுக்கு பாலியல் ரீதியான வன்முறை இல்லவே இல்லை ,” என்று திருப்பதி வெங்கடாசலபதி மீது சத்தியம் வைக்காத கதையாக ரகுல் அடித்து சொல்ல, ஸ்பைடர் நடிகை மாதவி லதா கம்பு சுழற்றாத குறை,!
“ஏம்மா ரீல் சுத்துறே! உண்மையை மறைத்து சொன்னால் வாய்ப்பு கிடைக்கும்னு யாராவது சொன்னாங்களா? பச்சைப் பொய்! பேசாமல் இளம் நடிகைகளுக்கு நல்ல புத்தி சொல்லி அவர்களை எச்சரிக்கையாக இருக்க சொல்லு.!அதான் உனக்கு நல்லது” என்று அறிவுரை கூறி இருக்கிறார்..
அவர் பரவாயில்லை என்கிற மாதிரி ஸ்ரீ ரெட்டி கையில் வெள்ளைப் பேப்பரை விசிறியபடி “அம்மா ரகுல்….. எந்தெந்த தயாரிப்பாளர்கள் பாலியல் வன்கொடுமையாளர்கள் என்கிற பட்டியல் வேணுமா ?சொல்லவா?” பேப்பரை ஆட்டிக் காட்டுகிறார்..
யாரை காப்பாற்ற ரகுல் பிரீத்தி சிங் இவ்வளவு தூரம் வாதாடுகிறார்?