‘டக் ஆப் வார்!
‘தமிழ்ச்சினிமா வேலை நிறுத்தத்தில் யார் வெற்றி பெறுவது என்கிற ஈகோதான் முன்னிலை வகிக்கிறது. முடிவுக்கு வரவிடாமல் இழுத்துப்பிடிக்கிறது’ என்பதுதான் நாம் விசாரித்தது வரை கிடைத்திருக்கிற தகவல்.
தியேட்டர்களின் ஆன்லைன் ட்ரான்ஸ்பரன்சி என்பது மாநகர ங்களில் சாத்தியமாகலாம். மற்ற நகரங்களில் சாத்தியமில்லை என்கிறார்கள். மற்றும் கியூப் கட்டண பிரச்னையிலும் இறங்கி வருவது மாதிரி தெரியவில்லை. மேலும் தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள் மத்தியில்தான் இந்த பிரச்னை தீர்க்கப்படவேண்டும்.இதில் ஏன் தயாரிப்பாளர்கள் குறுக்கே வருகிறீர்கள் என்பது சில குதர்ப்பவாதிகள் எழுப்புகிற வினா! ஆனால் ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் ஒரு டிக்கெட்டுக்கு முப்பது ரூபாய் அதிகம் என்பது மக்களை சுரண்டுவதாகும். இதை தடுக்க வேண்டிய கடமை அரசுக்கு! ஆனால் அவர்கள் மொத்தமாக திரை உலக பிரச்னையையே கண்டு கொள்ளவில்லை. என்ன காரணம் என்பது புரியாத புதிர் ?
தற்போது சத்யம் குழுமம் தியேட்டர்களில் நயன்தாரா நடித்த திரைப்படத்தை வெளியிட மறுத்து விட்டனர் என்பது ஒரு சேதி! அவர்கள் சொன்னதாக சொல்லப்படுகிற காரணம் டப்பிங் படம் என்பதுதான்! இந்த குழுமத்தை சேர்ந்த எஸ்,பி.ஐ .சினிமாஸ் தான் தயாரிப்பாளர்கள் குழுவுடன் ஒத்துழைக்க மறுப்பதாக சொல்கிறார்கள்.
இப்படி முரண்டு பிடிப்பவர்களை எந்த சங்கம்தான் கட்டுப்படுத்த முடியும்?
அரசைத் தவிர!