நாடே கொந்தளிக்கிறது. எப்போது எரிமலை வெடிக்கும் அல்லது அடங்கும் என்பது அரசுகளின் கைகளில் இருக்கிறது.
இனமே அழிந்தபோது வேடிக்கைப் பார்த்தவர்கள்தானே இவர்கள் ! என்ன செய்து விடுவார்கள்? இடுப்பை ஒடித்துப் போட்டு எதற்கும் வடக்குத் திசையைப் பார்த்தே கை ஏந்த வைக்க வேண்டும், அடிமைகளாக வைக்க வேண்டும் என்கிற எண்ணம் மத்தியில் ஆளுகிறவர்களுக்கு வந்திருக்கிறது.
அதைக் கண்டித்துத்தான் தமிழகத்தில் போராட்டம் வலுத்திருக்கிறது. இதை திசை திருப்பும் வழியாக ஐ.பி.எல்.கிரிக்கெட்டை வாரியம் நடத்துகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் பாரதிராஜா.
“நம் இனத்தை அழித்தார்கள்.நாம் எதுவும் பேசவில்லை.
நம் மொழியை சிதைக்கிறார்கள்.நாம் மவுனமாக இருக்கிறோம்.
நம் உரிமைகள் பறிக்கப்பட்டபோதும் போராடாமலேயே இருக்கிறோம்.
உறைந்துபோய்க் கிடக்கும் நம்முடைய உணர்வுகளை உசுப்பிவிட்டு,
நம்மை புரட்சியாளர்களாய் மாற்ற எத்தனையோ அமைப்புகள் போராடிக் கொண்டிருக்கிறபோது,
ஐபிஎல் எனும் மாய உலகத்துக்கு நம்மை அடிமைப்படுத்தி நம்முடையதேசியப்புரட்சிக்கு தீ வைக்கும் முட்டாள்த் தனமான விளையாட்டை நிராகரிப்போம்.
தமிழ் மக்களின் ஒற்றுமைகருக்கூடிவரும்போது ,கருக்கலைப்பு செய்ய வரும் எந்த ஒரு நிகழ்வுக்கும் தடை விதிப்போம்.
தமிழா!
ஐபிஎல் எனும் கிரிக்கெட்டை நிராகரி!
விளையாட்டு மைதானத்தில் இருக்கைகள் அல்ல புரட்சிகர மைதானம்!” இவ்வாறு கூறி இருக்கிறார் இயக்குனர் இமயம்.