மான் வேட்டை ஆடியதாக சல்மான்கான் உள்பட ஐந்து பிரபல பாலிவுட் கில்லாடிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. 1998- ல் வழக்கு தொடரப்பட்டது கணக்குப் போட்டு பாருங்கள் .ஒரு மானை வேட்டையாடிய வழக்கு இத்தனை வருடங்களாக இழுக்கப்பட்டு இப்போதுதான் சல்மான் குற்றவாளி என்பதாக தீர்ப்பு கூறப்பட்டிருக்கிறது.
சோனாலி பெந்த்ரே,சயிப் அலிகான்,தபு, நீலம் ஆகிய நால்வரும் தப்பு செய்யாதவர்கள் என்பதாக தீர்ப்பு வந்திருக்கிறது.
சிறையா, அபராதமா? விவாதம் நடக்கிறது. மற்ற நால்வரை விடுதலை செய்ததை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டிருக்கிறது.
சல்மானுக்கு ஐந்து ஆண்டு ஜெயில் என்பதாக தீர்ப்பு வந்திருக்கிறது.