காவிரி விவகாரம் தொடர்பாக ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.இந்நிலையில் இன்று இரவு எட்டு மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. போட்டி நடைபெறும் மைதானத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவரலாற்றிலேயே தற்போதுதான் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சேப்பாக்கம் மைஅதானத்தை சுற்றி உள்ள சாலைகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.போராட்டக்குழு முற்றுகையிடலாம் என சென்னை சேப்பாக்கம் முழுதும் அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இநிலையில் இதைப்பற்றிஎல்லாம் கவலைப்படாத போராட்டக்குழுவினர் மைதானத்தை முற்றுகையிட்டனர் .ஐ
பிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் அண்ணா சாலையில் போராட்டம் நடத்தினர்.சென்னை அண்ணா சாலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்து வருகின்றனர்.
ரஜினிரசிகர்கள் கைது இதற்கிடையில் கிரிக்கெட்போட்டியை காண வந்த ரசிகர்களுக்கு ரஜினி அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர் கறுப்பு பேட்ஜ் அணிந்தனர். கறுப்பு பேட்ஜ் விநியோகித்த 50 பேரை போலீசார் கைது செய்தனர். பல்வேறு தரப்பினர் போராட்டங்களால் சென்னை சேப்பாக்கம் பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது.தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் அபி சரவணன் மற்றும் பல துணை நடிகர்கள் போராட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் திரைப்பட இயக்குநர்கள் சீமான், பாரதி ராஜா, வைரமுத்து,வெற்றிமாறன், தங்கர் பச்சான், கவுதமன் உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.பல்வேறு அமைப்பினரும் அணியணியாக திரண்டு போராட்டம் நடத்தியதால் அவர்களை கட்டுப்படுத்த போலீசார் மிகவும் திணறினர். போராட்டக்காரர்களை இனம் காண முடியாமல் வேலைக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்தவர்கள் மீதும் போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர் .
இதனால் அவர்கள் அலறியடித்து சிதறி ஓடினர் . அண்ணாசாலை பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது.இந்நிலையில் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை மைதானத்தின் பின்புறமாக உள்ள சின்ன வழியில் மைதானத்திற்குள் அழைத்து சென்றனர் . மைதானத்தில் பார்வையாளர்கள் காலரி காலியாக காட்சியளித்தது கண்டு players சோர்வடைந்தனர்.