தமிழுக்கு வந்து தங்கி வாழ்ந்து அப்படியே ஆந்திரா பக்கமாகச்சென்று இளைப்பாறி பாலிவுட் பக்கமாக பறந்து போனவர் டாப்சி! அவ்வளவாக கிசு கிசுக்களில் மாட்டாதவர்.
“இதுவரை நான் வம்பு வழக்குகளில் மாட்டியதில்லை.நானுண்டு என் தொழிலுண்டு என இருந்துவிட்டேன்.என்னுடைய தங்கச்சி நடிக்க வந்து விட்டாள்.அவள் என்றால் எனக்கு உயிர்.அவளைப் பாதுகாப்பது எனது கடமை.எந்த வித சர்ச்சையிலும் சிக்கி விடக்கூடாது என்று கவலையாக இருக்கிறது.” என்று டாப்சி உருகி மருகுவதற்கு அவசியமே இல்லை என்பதைப்போல தங்கை ஷாஹுன் அட்டகாசமாக பிகினியில் கலக்கி வருகிறார்,
தங்கையிடம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் டாப்சி!